Sunday, 23 April 2017

ம(றை)றந்துபோனவள்


[எச்சரிக்கை:என்னை வெறுக்கின்ற ஆனால் நான் நேசிக்கின்ற யாரும் முதல் பத்தியை தவிர்த்து இந்த பதிவை படிக்கலாம்.உங்கள் மனங்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம்.கனவுகள் பாதி,நினைவுகள் மீதி!
என்னுடைய மற்ற படைப்புகள் யாவும் எல்லா படைப்பாளர்களை போல அங்கிகாரத்தை எதிர்பார்த்து படைக்கப்பட்டவை,ஆனால் இந்த பதிவு மனிதர்களால் மறுக்கப்பட்ட என் மன ஆறுதலுக்காக எழுதப்பட்டது.இதற்கு யாரும் பாராட்டு பாத்திரம் வாசிக்க வில்லையே என நான் வருந்தப்போவதில்லை.எண்ணில் இருந்த படைப்பாளன் தற்காலிகமாக செத்துவிட்டான் இது பாதிப்பாளனின் பதிவு....!]
நாளை வெற்றி தேவதை எனக்கு மாலை சூடப்போகிற நாள்.தோல்விகளிடம் விலாசம் கேட்டு வெற்றி சிகரத்தை அடைந்ததற்காக வரலாறு என் பெயரை அதன் செப்பேடுகளில் குறித்து கொள்ளும் நாள்.பல நூறு இரவுகள் கடந்த உழைப்பு உச்சி ஏறும் நாள்.நினைவுகள் நெனவாகும் நாள்.ஓராண்டு ஐ .ஏ.எஸ் பயிற்சியை முடித்து விட்டு சிறந்த மாணவன் என்ற பட்டதோடு சொந்த மாவட்டம் நோக்கி பறந்து சென்று ஆட்சியராக பொறுப்பேற்க நாளைய விடியலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
வெற்றிக்கு முன் இருக்கும் இந்த பொன்னிற இரவில் என்னையே நான் தொலைத்து கொண்டு இருக்கிறேன்.என் வாழ்க்கை புத்தகத்தில் சில பக்கங்களை முன்னோக்கி திருப்பி பார்க்கிறேன்.என்னை மறந்துபோனவில் நினைவலைகளில் மனதை தொலைக்கிறேன்.கனவுகள் வென்ற பிறகும் கண்கள் கலங்கி நிற்கிறேன்..!
கல்லூரி வாழ்க்கையில் இரண்டாண்டு முடிந்த பிறகு என் வீடும்,நாடும் எனக்களித்த முதல் கவுரவ பட்டம் பிழைக்கத்தெரியாதவன்.வாழ்க்கையின் ஈதார்த்தங்களோடு அல்லாமல் கனவு உலகில் கண்ணிமைக்காமல் மூழ்கியிருந்தேன்.அக்கனவில் அவளும் அடக்கம்.
ஈராண்டுகளுக்கு முன்னாள் அவளை நான் பார்த்த போது தான் காதல் வைரஸ் என்னை தொற்றிக் கொண்டது.ஹார்மோன் செய்யும் கலவை இது என உடன் இருந்த மேதாவிகள் சொன்னார்கள்.ஆனால் ,என் இதயமும் மனமும் ஒருசேர அறுதியிட்டு சொன்னது, அவள் உனக்காகவே படைக்கப்பட்டவள் என்று !
அப்போது தான் காதல் பாதை ஒன்று உண்டு என்பது என் மூளைக்கு மனம் ஞாபகப்படுத்தியது.காதல் விளையாட்டில் கரைந்து போக ஆரம்பித்தேன் அனால் ஒருபோதும் கடமை மறக்கவில்லை.
காலங்கள் ஓடியது!என் காதல் என்னும் குழந்தை மிகப்பெரிய பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு பிரசவித்தது.ஆம்..!நட்சத்திரங்கள் உறைந்து போகும் அளவிற்கும்,சூரியன் மறித்து போகிற காலம் வரைக்கும்,காற்று கவிதை பேசிக் கொண்டிருக்கிற வரையிலும் உன்னை நான் காதலிக்கிறேன் என கண்ணியமாக சொன்னேன்.அதற்கு அவள்,அவள்...........
உன் காதல் இறந்து பிறந்த குழந்தை என்று இதயத்தை கொஞ்சம் சீண்டி பார்த்தால்.ஆனால்,அவள் ராதையின் மறுஉருவம்! விட்டு விலகவும் இல்லை,தொட்டு தொடரவும் இல்லை.நட்பென்ற வட்டத்தை தாண்டி அவள் எள்ளளவும் வருவதாய் எண்ணமில்லை!
நான் முள் அவள் ரோஜா,சேர முடியாது என்று தெரிந்தும் பிரியாமல் இருந்தோம்..!
ஓராண்டு இடைவெளிக்கு பின் எங்கள் உறவினை புதுப்பித்து கொண்டு முன்சென்றோம்.காதல் நட்பு ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட வழி(லி )யினில் இருவரும் பயணித்தோம்..
இந்த இடத்தில நான் வைரமுத்துவின் வார்த்தைகளை கட்டாயமாக கடன் வாங்கவேண்டி வருகிறது....
எனக்கும் அவளுக்கும் இடையில் காலம் சுவரெழுப்பியது.அவள் நினைத்திருக்கலாம் அது சீனச் சுவரென்று,நான் நினைத்தேன் அது கண்ணாடி சுவரென்று அவளை ஸ்பரிசிப்பதில் அது எனக்கு கட்டளை இட்ருக்கலாம் அனால் அவளை தரிசிப்பதால் இருந்து அது என்னை தள்ளி வைக்கவில்லை.
காலம் ஓடியது.காலப் பெருவெள்ளத்தில் அவளும் என் வாழ்க்கையில் இருந்து அடித்து செல்லப்பட்டால்.கண்தெரியாத இடத்திற்கு என்னிலிருந்து இயற்கை அவளை கை பிடித்து கூட்டிச்சென்றது போல!தொலைப்பேசி நிரந்தரமாக துண்டிக்கப் பட்டது(அவளுடைய உறவும் தான்).இந்த உலகத்தையே மாய்க்க கூடிய என் கதறல் அவள் காதுகளுக்கு கேக்கதவாறு எங்கோ போனால்..!
நான் என்னை மறந்தேன்.மனம் பலவீனப்பட்டேன்.என்மீது அவளுக்கு காதல் இல்லை என்றாலும் என் காதலி உடன் இருக்கிறாள் என்ற ஆறுதல் என்னை வாழவைத்தது,அதையும் காலம் என் கைக்குள் இருந்து பிடிங்கி கொண்டது.இந்த உலகம்,நிலா,நட்சத்திரம்,ஆகாயம் எல்லாம் அர்த்தமற்றுப்போனது எனக்கு...!இன்னும் என் காதல் கங்கையை போல புனிதமானது அவள் அதை மறுக்கவில்லை,மறந்துபோனால்..!
மெல்ல மெல்ல மனதினை பண்படுத்தினேன்!கண்ணீர் உலகத்தை விட்டு லட்சிய தீபம் எரிய பாடுபட்டேன்..! இரவுகளை தியாகம் செய்து லட்சிய வாழ்க்கை வாழ முயன்றேன்.வரலாறு எனக்காக தவம் கிடப்பதை உணர்தேன்.அவள் நினைவுகள் என்னை பாதிக்காதபடி படித்தேன்.
சில சமயம் அவள் ஞாபகங்கள் என்னை தாலாட்டும்..!
உலகத்தால் நான் நிராகரிக்கப்படும் போதும்,உதடுகள் பல என்னை எள்ளி நகையாடிய போதும் காயம்பட்டு போன எனக்கு அவள் வார்த்தைகளே மருந்தானது !
தோல்விகள் என்னை துரத்திய போது அவள் ஒற்றை குறுஞ்செய்தியே எனக்கு பஞ்சுமெத்தை!
எண்ணில் இருந்து என்னை பிரித்து பார்த்தால்,அவள் வார்த்தைகள் பெரும் காயம் ஆற்றும் வார்த்தைகளோ கண்ணீர் துடைக்கும் அல்ல ஆனால் ,நான் கைவிட்ட உற்சாகத்தை கரம் பிடிக்க அது போதுமானதாகவே இருந்தது..!
அவள் ஒற்றை கண்ஜாடை என் ஒவ்வொரு எதிர்கால வெற்றியின் அஸ்திவாரம்.
அவள் காதல் காற்றில் எங்கு நான் கண்ணனுக்கு தெரியாமல் தொலைந்து போய்விடுவேனோ என்ற கவலை அவளுக்கு அதிகம் இருந்தது!
கனவினை மெய்ப்பிக்கும் இந்த 8 வருட யுத்தத்தில் ஆயிரம் கவலை,சில நூறு வருத்தம்,பல லட்ச தோல்விகள்,கோடி வலிகள்,வெகு சில கண்ணீர் ஒரே ஒரு நான்.இவற்றையெல்லாம் நாட்குறிப்பில் குறித்துவைக்க கூட காலம் எனக்கு நேரம் வழங்கவில்லை.என் தலையணையே உனக்காக நான் படைத்த என் கண்ணீர் காவியம் பேசும் பழைய காதலியே!நீ இல்லாமல் தன்னந்தனியாக போராடி ஜெய்திருக்கிறேன்.
அன்பே!நீ சொன்னது போல நாளை லட்சிய தீபம் ஏற்றப்போகிறேன்.நிராகரித்த ஆயிரம் கைகளும் என் கழுத்துக்கு மாலையிட கண்ணிமைக்காமல் காத்திருக்கின்றனர்.
இப்போதும் கூட உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் எனக்காக அவள் உதடுகள் பிராத்திக்கும் என்று நம்பிக்கை எனக்கு இனமும் உண்டு.நாளை கலெக்டர் சீட்டில் பிறகு என் மைத்துளிகள் ஏழைகளின் கண்ணீர் தூளிகை துடைக்க சிந்திக்கொண்டிருக்கும் ஆனால் இதயத்தின் எங்கோ ஒரு பிரேதேசத்தில் அவளுக்காக என் மனசு கண்ணீர் சிந்திக்க கொண்டிருக்கும்.
ப்ரியமானவளே!காலம் என் காதலை நிராகரித்திருந்தாலும்,நீ என்னை மறந்துபோனாலும் ,இதயம் மரத்து போகிற வரையில் என்னுள் நீ என்றுமே மறைந்துபோகமாட்டாய் ...!


கோவை.சரவண பிரகாஷ்.

No comments:

Post a Comment