Friday, 28 April 2017

நினைவலைகள்


யாரது.யாரது...? 
என் தூக்கத்தை களைத்து 
துக்கம் ஏற்படுத்தியது..! 

என்ன இது?அச்சத்தின் 
பிடியில் நான் எப்போது 
அகப்பட்டேன்..! 

ஆற்ற முடியாத 
கவலை ஏன் இப்போது 
என்னை அள்ளி கொல்கிறது..! 

ஓ!இது அவளின் நினைவலைகள் 
என்று புத்திக்கு எடுத்துரைத்தது 
மெல்ல மெல்ல மனம்..! 

அழுகை,ஏக்கம்,ஆனந்தம் 
கவலை எல்லாம் ஒருசேர 
என் உணர்வை ஆக்கிரமித்தன...! 

அவள் கனவுகளை கொன்றவன் 
ஆதலால் என் நித்திரையை 
கொள்ள வந்தாள் போலும்..! 

நாங்கள் காதல் மொழி 
பேசிய நாட்களை காலம் 
கணக்கெடுத்துவைத்திருக்கும்...! 

கங்கை கூட வற்றிப்போகலாம் 
நம் காதல் நதி வற்றாது என 
வாய்மொழி பேசியவள் தான்..! 

உன் காதல் விழியே 
என் காயத்திற்கு மருந்து என 
கண்ணியமாக சொன்னவன் நான் ..! 

நான் அவளானேன் 
அவள் நான் ஆனாள் அதனால் 
காதல் காதலாயிற்று...! 

எங்கள் காதலின் இடையில் 
சதிசெய்து ஜெய்ததது 
விதி..! 

சாதி என் சட்டை பிடித்ததாலும் 
சம்பிரதாயம் அவளோடு சண்டை பிடித்ததாலும் 
சமுதாயம் எங்களை சந்தேகித்ததாலும் 

எங்கள் காதல் என் இன்றைய 
கண்ணீரைப் போல உலகத்திற்கு 
தெரியாமல் மறைந்துபோனது.... 

ஆனால் எங்கள் காதலும் 
கண்ணீரும் இன்று வரை 
நிஜம்..! 

ஒவ்வொரு மனிதனின் இதயஒரத்திலும் 
ஒரு அழுகை,ஒரு பயம் 
ஒரு தோல்வி,ஒரு அவமானம் போல 
முதல் காதலும் வெளியில் சொல்ல முடியாத 
அத்தியாயங்களில் சேர்ந்துவிடுகிறது...! 


எல்லாமே நிசப்த்தமாகி 
போன இந்த இரவிலும் சட்டென்று 
துயில்களைந்தான் என் மூத்த மகன்.. 

அவனை அள்ளிஅனைத்துக் கொண்டு 
காய்ந்த கண்களோடு கட்டிலை அடைந்தேன், 
அந்த காயவரிகளை மனதுக்குள் சொல்லிக்கொண்டு... 

காலங்கள் முடியாமல் 
காலனை காணாமல் எனைவிட்டு உன் 
நினைவலைகள் நீங்காது கண்மணியே...! 


கோவை.சரவண பிரகாஷ்.

No comments:

Post a Comment