Monday, 17 July 2017

மனமே நீ கண்ணுறங்கு..!


(காயங்களால் சூழப்பட்ட இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்தில் என் பேனா சிந்திய முத்துகளை உங்கள் முன் தொடுக்கிறேன்) 


ஆராரோ பாட யாருமில்லாது, பொழுதெல்லாம் 
கதறி அழுகின்ற ஊமை உள்ளத்திற்கு என் 
தங்க வரிகளால் தாலாலோ பாடுகிறேன் 
மனமே நீ கண்ணுறங்கு....! 

பயப்படாதே!காயங்கள் மட்டுமே அறிந்த உன் 
இதயத்தை பிழிந்தெடுத்து குருதிகுடிக்கும் 
பொய்யுருவில் வருகின்ற சில 
அகோரிகளின் எச்சம் நானல்ல...! 

சில நூறு அறுவை சிகிச்சை 
செய்த இதயத்திற்கு வார்த்தைகளால் 
தையலிட முற்படுகிறேன்...! 


நீ உலகத்தின் விசித்திரம் -நீ 
உண்டாக்கிய கண்ணீர் வெள்ளத்தில் 
நீயே அடித்துச் செல்லப்படுகிறாய்....! 


உன் உண்மை கண்ணீரையும் பொய் 
சிரிப்பையும் இதுவரையில் உணர்ந்தோர் 
ஒன்றோ இரண்டோ இருக்கலாம்..! 

பூதங்கள் தேவையில்லை பயமுறுத்த காரணம் 
இது ப்ருடஸ்கள் நிறைந்த உலகமடா..! 

ஒரு நிமிடம் என் எழுத்தாணி 
உனக்காக கண்ணீர் சிந்துகிறது...! 

கவலை காட்டில் தொலைந்து போகாதே! 
எழு ,கண்ணீர் துடை,உற்சாகம் கொள்..! 
சோகம் மறந்து லட்சியம் கைகொள்...! 


இருட்டு உலகத்தின் குருட்டு விழிகள் 
உன் உணர்வுகளை 
நெகிழிப் பந்துகளாக்கினாலென்ன,நீ 
நெகிழா நெஞ்சு கொள்..! 


நிராகரிப்புகளுக்காக நீ 
நிர்மூலமாகலாமா? 
உந்தியேலும் ஆற்றல் கொள்..! 

இடைவெளி இல்லா இரட்டை பிரசவம் 
போல வேதனையும்,தோல்விகளும் 
உனக்கு கண்ணாமூச்சி காட்டினாலென்னா, 
மனமே நீ துயரமறந்து கண்ணுறங்கு..! 

மண்தோடும் மா மரக்கிளைகள் 
கலங்குவதில்லை,மதி கொண்ட 
மானுட மனமே,அமைதியாய் 
நீயும் கண்ணுறங்கு....! 

நினைத்து எல்லாம் நிஜமாகும் 
இனி நித்தமும் நமக்கொரு வரமாகும் 
நம்பிக்கை பூக்கள் உதிரா வரை 
நாளைகள் எல்லாம் நமதாகும்...! 

நடப்பவை எல்லாம் இனிதாகும் மனமே 
நலமாய் நீ கண்ணுறங்கு, 
மனமே நீ கண்ணுறங்கு....! 


கோவை.சரவண பிரகாஷ்.

Wednesday, 5 July 2017

கலங்காதிரு நன்னெஞ்சே!

                                                      கலங்காதிரு நன்னெஞ்சே!
                                                *********************************************************************

சொல்லி அழ யாருமின்றி,உன் வார்த்தைகள் தவித்தாலும்
யாருமில்லா தனிமை உன்னை விட்டு விலக மறுத்தாலும்
இன்னும் நீ கடக்க வேண்டிய தூரம் நின் கண்ணெதிரே  உண்டு
அதுவரை கலங்காதிரு நன்னெஞ்சே...!

உற்றார்,உறவினர் யார் தடுத்தாலும்,உயிராய் நினைத்த
நண்பர்கள் உன்னை பிரிந்தாலும்,சோக காட்டில் உன்
சுவடுகள் பதிந்தாலும்,சரித்திர நாயகன் நீயென
உலகம் பேசும்வரை கலங்காதிரு நன்னெஞ்சே....!

வற்றாத கவலை கடலலைகள்  உன் மனபிரேதேசத்தில் சூழ்ந்தாலும்
துரோகம்,சூழ்ச்சி,கயமை இவைகளால் நீ சூழப்பட்டாலும்
நாளெல்லாம்  கண்ணீரில் நீ கரைந்து போனாலும்,கடமைகள்
காத்திருக்கிறது அதற்காகவேனும் கலங்காதிரு நன்னெஞ்சே...!


எத்தனை நாக்குகள் உன்னை கீறிச்சென்றாலும்,உன்னவரே
உன்னை நிந்தனை செய்தாலும்,அணையாத சோகத் தீ
உன்னை கொஞ்சம் கொஞ்சமா சுட்டெரித்தாலும்,உந்தன் புகழொளி
ஒருநாள் சுடர்விட்டெரியும்,அதுவரையில் கலங்காதிரு நன்னெஞ்சே...!

புரிந்தவர்கள் பிரிந்து சென்றாலும்,பிரிந்தவர்கள் புரிந்து கொன்றாலும்
உனக்குரியவர்களே உன் உயிர் பிழிந்தாலும்,நினைவுகளால் நித்தம் நீ
கைதாகிறபோதும்,புது விடியல் ஒன்று உனக்காய் காத்திருக்கும்
அதுவரையேனும் நீ கலங்காதிரு நன்னெஞ்சே.....!



கோவை.சரவண பிரகாஷ்.

Saturday, 10 June 2017

அந்த ஒரு சொல்!

 
                                                                 
நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்.உமா என்ற ஆசிரியரை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஹிந்தி ஆசிரியர் எல்லோரும் அவரை உமாஜி என்று அழைப்போம்.அருமையாக ஹிந்தி சொல்லி தருவார்.அதனாலே எனக்கு ஹிந்தி மீது ஆர்வம் ஏற்பட்டது.

ஒருநாள் வகுப்பிற்கு வந்தார்.அன்று என்ன பாடம் எடுக்க போகிறார் என்று எல்லோரும் ஆவலாய் காத்திருந்தோம்.உமாஜி இன்று பாடம் எதுவும் எடுக்கப்போவதில்லை என்றும் முக்கியமான அறிவுரைகள் வழங்க போவதாகவும் சொன்னார்கள்.எங்களுள் சிலர் செவிகளை கூர்மையாக்கி கொண்டோம்.பலர் இமைகள் மூடி தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

அன்று அவர் குமுளி(bubble gum) எடுத்து கொள்வதால் என்னென்ன தீமைகள் இருக்கிறது.அது உடலிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எடுத்து சொன்னார்.காரணம்,உமாஜி வருகின்ற வழியில்  அப்போது பல மாணவர்கள் குமுளியை ஊதிக்கொண்டிருந்தார்களாம். அரை மணிநேரம் அதனை பற்றி தெளிவாக பேசினார்.

துரித உணவுகள் உண்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.நான் ஆழமாக கேட்டுக்கொண்டிருந்தேன்(பாடத்தை கூட இது வரை அப்படி கவனித்து இல்லை).மெல்ல மெல்ல என் எண்ணம் விரிந்தது.நான் அடிக்கடி குமுளி பயன்படுத்துபவன்.தினமும் நண்பர்களோடு சேர்ந்து குமுளி இடுவேன்.எனக்கு பிடித்த ஆசிரியர் அறிவுறுத்தியத்திலிருந்து இன்று வரை நான் குமிழி பயன்படுத்துவதே இல்லை.பலசமயம் நண்பர்கள் வற்புறுத்தியும் நான் ஏற்க வில்லை.

அவர் பேசி 8 ஆண்டுகள் இருக்கும்.இன்னும் என் நினைவில் இருக்கிறது.அவர் சொற்படியே நடந்து வருகிறேன்,என் வாழ்வின் எஞ்சிய பகுதிகளும் ஒருபோதும் குமுளி பயன்படுத்தமாட்டேன் என மனதார சபதம் எடுத்துள்ளேன்.துரித உணவுகளை தான் அவ்வளவு சீக்கிரமாக விடமுடியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறேன்.அந்த ஆசிரியர் எனக்கு பிடித்தவர் என்பதால் நான் அவர் அறிவுரையை கேட்கவில்லை.எனக்கு பிடித்தார் போல அன்று அவர் பேசியதால் தான் இன்று நான் பல தீயபழக்கங்களை கைவிட்டுள்ளேன்.


கோவை.சரவண பிரகாஷ்.

ஆசிரியர்களுக்கு ஒரு மாணவனின் கடிதம்!


மதிற்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு, 

உங்களால் பேரறிவோடு விளங்கும் ஒருவன்,நீங்கள் ஒளியேற்றி வைத்த அனல் விளக்கான ஒருவன் மிகுந்த மரியாதையோடும்,பரந்து விரிந்த மனதோடும் மாணவ சமுதாயத்தின் பிரதிநிதியாய் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 

நாளைய இந்தியாவின் எதிர்காலம் எங்களது கைகளில்,ஆனால் எங்களது எதிர்காலம் உங்களுடைய காலடியில் இருக்கிறது. 

வாழும் தெய்வங்களே!எங்கள் முன்னேற்றத்திற்கு ஏணிப்படிகளாய் இருப்பவர்களே,உங்கள் கரங்களை படிகளாக்கி அல்லவா நாங்கள் மேலுயர்ந்தோம்.இந்த சமுதாயத்தில் உன்னிப்பாக கவனிக்க படவேண்டியவர்கள் நீங்கள்!நிர்வாணத்தை மறைக்க நெசவு நெய்ந்த தொழிலாளர்களுக்கு இந்த சமுதாயம் தந்தது சவத்துணி தான் என்பது போல எங்கள் அறியாமையை அழித்து அறிவொளி அளிக்கும் உங்களை சமுதாயம் இன்னும் சிம்மாசனத்தில் ஏற்றவில்லை. 

மாணாக்கர்களின் வெற்றியில் வெற்றி அடைபவர்கள் நீங்கள்.பொறாமை கொள்ளாத ஒரே ஜீவன் நீங்கள்.பெற்றெடுத்த தாய் கூட பத்து மாதங்கள் தான் எம்மை வயிற்றில் சுமந்தாள்,ஆனால் பள்ளியில் பதினான்கு ஆண்டுகளும் கல்லூரியில் நான்காண்டுகளுமாக ஏறத்தாழ 18 ஆண்டுகள் எங்களுக்காக ஓடி ஓடி உங்கள் கால்கள் தேய்ந்திருக்குமே! 

நாங்கள் பொறுப்பான பதவியில் அமர வேண்டும் என்பதற்காய் காலமெல்லாம் நின்றுகொண்டே இருப்பவர்களே!உலகத்தின் கண்களுக்கு ஒளி மட்டுமே தெரியும்,ஏற்றிவைத்தவர்களை அது கணக்கில் வைத்துக்கொள்வதில்லை.இன்று பிரகாசமாக ஒளிவீசும் எங்களை ஏற்றி வைத்து தீக்குச்சிகளாய் கரைந்து போவார்கள் நீங்கள். 

இன்று வெற்றி மேடையை அலங்கரிக்கிற எல்லோரது பேச்சிலும் அவரது ஆசிரியர் பெயர் நிச்சயம் அடிபடும்.ஆனால் அந்த வேளையில் அந்த ஆசிரியர் அங்கிருக்கமாட்டார் அடுத்த படைப்பை உருவாக்குவதில் உழைத்து கொண்டிருப்பார். 

வெற்றியின் விலாசத்தை அடைந்த எல்லோர் வாழ்விலும் அவர்களை தட்டி கொடுத்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்.இன்று எங்கள் கிளைகள் கொஞ்சம் விரிந்திருக்கலாம் ஆனால் ஆசான்களே எங்கள் வேர்கள் வசிப்பது உங்களிடத்தில் தான். 

புதிய இந்தியாவின் பிரம்மாக்களே!காலப் பெருவெளியில் நம் சிலவற்றை மறந்து விட்டோம் அல்லது தொலைத்து விட்டோம்.உங்களுக்கும் எங்களுக்கமான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டிய சூழலில் காலத்தால் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.மிகுந்த பணிவோடு உங்களிடத்தில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.பிழையொன்றும் இல்லையேல் உரைக்கிறேன் தயைகூர்ந்து கேட்டருள்க! 

இந்தியாவில் கல்வியின் தரம் ஒருவேளை குறைந்திருக்கலாம்.ஆனால் நாளைய நாட்டின் தூண்களுக்கு குறை ஒன்றும் இருக்க கூடாது.இந்த கல்வி முறை 3 ஆண்டுகள் மூச்சுப்பிடித்து எப்படி ஒரு ஆற்றை கடக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லி தருகின்றன.வாழ்க்கையிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என தற்காலிக தீர்வுகளை சொல்லி தரும் பாடபுத்தகங்களே பெருகி உள்ளன.கல்வி என்பது வாழ்க்கையை எப்படி ஜெயிக்கலாம் என்ற தாரக மந்திரத்தை சொல்லி தருவது.தன்னம்பிக்கை கற்று தருவது.தனித்திறனை வெளிப்படுத்துவது.சுயமாக சிந்திக்க கற்று தருவது. 

நாம் நாட்டின் இன்றைய கல்வி முறையில் எங்களுக்கு 100 சதவீத உடன்பாடு இல்லை.அக்குறையை கூட 
ஆசிரிய பெருமக்களே உங்களால் மாற்ற முடியும்.கணிதம்,பொறியியல்,வேதியல் இவற்றை மட்டுமே போதிப்பது ஆசிரியருடைய வேலை.அவற்றில் இருந்து இரண்டு நிமிடம் விலகி நின்று வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவது குருவினுடைய வேலை.நீங்கள் நல்ல ஆசிரியர்களாக இருக்கவில்லையென்றாலும் பரவாயில்லை தயவு செய்து ஒரு குருவாக இருங்கள்.ஏட்டு கல்வியோடு சேர்த்து ஒவ்வொரு கல்விநிலையங்களிலும் மறந்து போன வாழ்க்கை கல்வியை போதியுங்கள்.காலத்தால் இயந்திரமாக்கப்பட்ட நாங்கள் சில நிமிடங்களாவது மனிதர்கள் ஆவோம்.வஞ்சகம்மிக்க அறிஞனாக இருப்பதை காட்டிலும் அறிவற்ற ஒழுக்கமிக்கவனாக இருப்பதும் ஒருவகையில் சிறந்ததே. 

எங்களோடு மனதோடு மனம் விட்டு பேசுங்கள்.எங்களின் எண்ணங்கள் எல்லாம் உங்கள் சிந்தையில் குடியேறும்.முதலில் எங்கள் மன அழுக்குகளை போக்குங்கள்.எங்கள் மனம் என்னும் களர் நிலத்தை பண்படுத்துங்கள்.பிறகு அறிவை புகுத்துங்கள். 

குருட்டு உலகத்தால் நிராகரிக்கப்பட்ட,வேதனைகள் கண்ட,தாழ்வு மனப்பான்மை மிக்க எத்தனையோ மாணவர்களுக்கு தம் ஆசான்களின் கைகள் அல்லவா ஏணிப்படிகள்.இந்த கல்விமுறை பிகாசோவை சச்சின் ஆக்கவும் ,சச்சினை மில்டன் ஆக்கவும் ,மில்டனை காலம் ஆக்கவும் முயற்சித்து கொண்டிருக்கிறது.நீங்களும் அதற்கு துணைபோகாதீர்கள்.எங்களின் எதிர்காலத்தை உதடுகளால் உச்சரிக்கும் நீங்கள் தான் எங்கள் உண்மை நிலையை எங்களுக்கே அறிமுக படுத்தி அத்திறமையை ஊக்குவிக்க வேண்டிய மிக பெரிய பொறுப்பும் உங்களிடத்தில் ஒப்படைக்க பட்டிருக்கிறது.எத்தனை ஆயிரம் திறமைகள் மண்ணோடு புதைந்திருக்கும்,அத்திறமைகளுக்கு நீரூற்றி வளர்க்க வேண்டியவர்கள் நீங்கள்.தயவு செய்து நீங்கள் உங்களிடத்தில் உள்ள காலமையும் ,மில்டனையும்,சச்சினையும் அடையாளம் கண்டுகொண்டு ஊக்குவியுங்கள். 

உங்கள் கைக்குள் நாங்கள் இருக்கிறோம்.அதிகம் அழுத்ததிர்கள் உடைந்து விடுவோம்.லேசாக விடாதீர்கள் நழுவி விடுவோம்.எங்களை வளைக்கிற அவசரத்தில் உடைத்து உடைத்தீர்கள்.எங்கள் கனவுகளுக்கு உயிர் கொடுக்க வேண்டியவர்கள் நீங்கள்,சேதப்படுத்திவிடாதீர்கள்! 

உங்கள் சொற்கள் தான் எங்களுக்கு வேதமந்திரம்.அச்சொற்கள் எங்கள் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டும்.அச்ச்சொற்கள் கோழையையும் மாவீரனாக வேண்டும். ஒருபோதும் எங்களை தாழ்த்தி விட கூடாது.களிமண்ணை களிமண் என்று சொல்லிக்கொண்டிருப்பது உங்களை போன்ற பிரம்மக்களுக்கு அழகல்ல,அக்களிமண்ணையும் அழகிய சிற்பமாக வடிப்பதில் தான் உங்கள் கைவண்ணம் ஒளிந்திருக்கிறது. 
உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது நம்பிக்கையும்,உத்வேகமும்,வழிகாட்டுதலும் மட்டும் தான். 

பெரியயோர்களே!உங்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பல சமயம் பொய்த்து போகசெய்திருக்கலாம்.அத்தனையும் மன்னித்து மறைக்கின்ற தாய் உள்ளம் கொண்டவர்கள் நீங்கள்.உங்கள் மாணவர்கள் எப்போது உங்களிடம் மனம் விட்டு பேசுகிறார்களோ அப்போது நீங்கள் உங்கள் பணியில் கால்வாசி ஜெய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 

நீங்கள் கலங்கரை விளக்கமாக கூட மாறவேண்டும் கரை கிட்டத்தில் தான் என உற்சாகப்படுத்துங்கள் போதும்..! 

எங்களை மகான் ஆக்குவதற்கு முன் நல்ல மனிதனாகுங்கள் போதும்..! 

உங்கள் மீது ஆயிரம் கோடி நம்பிக்கைகளோடும்,வண்ணமயமான எதிர்கால கனவுகளோடும் வார்த்தைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறேன்,உங்கள் வார்த்தைகள் எங்கள் எதிர்கால வாழ்வின் தொடக்கமாக இருக்கும் என்ற எண்ணத்தில்....! 



-இப்படிக்கு 
உங்களால் உருவாகும் மாணவன். 

Monday, 5 June 2017

அவள் கொடுத்த முத்தம்!

                   

வெறுமை..நீண்ட காலமாய் மழையையே அறிந்திராத ஒரு பாலைவனம் போல் மனசெல்லாம் வெறுமை.நீண்ட நெடிய போராட்டங்களில் வெற்றி பெற்ற பிறகு ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கண்ணுக்கு தெரியாத,உணரமுடியாத ஒன்று என் மனதை ஆக்கிரமித்தது..!

துக்கம் முடிந்த வேளையில் கூட தூக்கம் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.விருக்கென எழுந்தேன்.பழையவற்றை அசைபோட்டேன்.

பெரும் வெற்றிகளை தருவதற்கு முன்னால் வாழ்கை சில பயிற்சி வகுப்புகள் எடுக்குமே அந்த சமயம் அது.ஒரு செயல் என்னால் முற்றுபெறவேண்டிய சூழல்.அந்த வேளை  அந்த வேலை  எனக்கு என்னிலும் மிக உயர்ந்ததாகத்தான் தெரிந்தது.பிரமித்து போனேன்!

என்னை பார்த்து உலகம் சிரித்தது.சாக்கடை எப்படி சாமி ஆகும் என சொல் விளையாட்டு ஆடியது.என்னை கைபந்துகள் ஆக்கி கீழே போட்டு உருட்டியது.

வாழத்தெரியாதவன் என வசை பாடியது,உன்னால் முடியுமோ என அய்யப்பட்டது!

என் "சா" தனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காய் புது சாதனை படைக்க வேண்டும் என எண்ணத்தில் குறித்துவைத்தேன்.

இரவுகளை பகலாக்கி ,பகல்களை இரவுகளாக்கி உழைத்தேன்.கொஞ்ச காலம் பசி தூக்கம் மறந்தேன்.

பட்டினி கிடந்தேன்,லட்சிய பசிக்கு யாரும் உணவிடாத காரணத்தால்.

மெல்ல மெல்ல ஐயம் தெளிந்தேன்,நிதானம் காத்தேன்.மெல்ல மெல்ல விரும்பிய செயல் கைகூடியது.வெற்றி கனி பறித்தேன் .

தேன் போல இன்பங்கள் திளைத்தது.வசை பாடிய உள்ளமெல்லாம் வாழ்த்தியது.இதயத்தை பெருமை ஆக்கிரமித்தது.

சொல்லிலடங்கா பாராட்டுக்கள்,என்னன்ற வாழ்த்துக்கள்,மலையென பரிசுகள்.உற்றார் உறவினர் ஒரு புறம்.சுற்றமும் நட்பும் ஒரு பெரும்.

ஆனாலும் என் இதயம் தனக்குரிய எதோ ஒன்றை தொலைத்துவிட்டதை போல் ஓர் உணர்வு அல்லது பிம்பம்.

தனிமையின் கரம் பிடித்தேன்.இப்போது இந்த தனிமை எனக்கு கசப்பாக இல்லை.காரணம் தனிமையின் கரம்  எனக்கு தேவைப்பட்டது.

கேள்வியே இல்லாத ஒன்றிக்காக விடை தேடும் பயணத்தை தொடர்ந்தேன்.என் பாதை எதுவென்று தெரியாமல் எதிர்ப்பாதையில் நடந்தேன்.எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாததை போல் ஒரு எண்ணம்.

நடந்து நடந்து கால்களும் தேய்ந்தது,அந்தியும் சாய்ந்தது.அது பூங்கா.மாலை மயக்கத்தில் யாருமற்ற பூங்கா.எனக்கான   சிம்மாசனமாய் பச்சை நிற இருக்கை.அமர்ந்தேன்.தனிமையின் ராஜனனேன்.என் எண்ணக்குதிரைகளை லாடங்கள் இல்லாமல் அவிழ்த்து விட்டேன்.அந்த மண்ணில் விட்டு விட்டு மழை பெய்தது.என் கண்ணீர்த்துளிகள்!

மனமெங்கும் குழப்பம்,வாடிய முகத்தோடு சிந்தனையில் ஆழ்ந்தேன்.திடுமென்று ஒருத்தி அருகில் வந்தமரந்தால்.சில வினாடிகளுக்கு பிறகு தான் என் கண்கள் அவளை படம் பிடித்தது.
என்ன சோகம் என்று வினவினாள்,என்ன சொல்லுவேன் எது சொல்லுவேன் காரணம் ஏதும் அறிகிலேன்.சொற்கள் வெளிநடப்பு செய்யதது.எங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் காவங்கு அரசாங்கம் நடத்தியது.

அன்பினால் வாழ்வபவள் போலும்.அன்பான பார்வையால் என் உள்ளத்திற்குள் ஒரு அங்குலம் நுழைந்தாள்.என் தடை பிடித்து தூக்கினாள் அப்போது தான் எழுந்தேன்.தலையை மெல்ல வருடி கொடுத்தால்.உள்ளம் உறைந்து போனேன்.என் குழப்ப  எண்ணங்கள் ஒவ்வொன்றும் அந்த வருடல்களில் சுடப்படுவதாய் எனக்குள் ஒரு ஆனந்தம்.கண்மூடி ரசித்தேன்.வருடியவள் கொஞ்சம் அருகில் வந்து நெற்றிப்பொட்டில் முத்தமிட்டாள்.கண்முடி திறப்பதற்குள் இறைவனை போல சட்டென்று மறைந்தாள்.

அவள் பேசிய மௌன மொழியை இப்பொது தான் வாழ்க்கை எனக்கு மொழிபெயர்த்து தந்தது.யாரென்ற தெரியாத அவள் என்னிடம் அன்பு மொழி பேசினாள்.கோடிகள் கொட்டி கொடுத்தாலும் வாங்க முடியாத மகிழ்ச்சி என்னுள்.சோக எண்ணங்கள் எல்லாம் வேரோடு அறுக்கப்பட்டதை போல் ஓர் குதூகலம்.சொல்லில் வரையறுக்க முடியாத அன்பை என்னுள் உற்பத்தி செய்தது.

காற்றில் அசையும் மரங்கள் என் பெயரை உச்சரிப்பதாகவும்,பூமி தாய் என் பிஞ்சு பாதங்களை தாங்குவதில் மகிழ்ச்சி கொள்வதாகவும்,இந்த சூரியன்,நிலா,நட்சத்திரம்,உலகம் எல்லாம் என்னை நேசிக்கவே படைக்கப்பட்டதாகவும் உணர்ந்தேன்.

அந்த  60 வயது கிழவியின் முத்தம்  எப்படி என் மனோநிலையை மாற்றியது  என்பதை இப்போதும் என்னால் யூகிக்க முடியவில்லை.

வாழ்க்கை அர்த்தப்பட்டதாய் உணர்ந்தேன்.தெளிந்த மனம் பெற்றேன்.

நண்பர்களே!"வாழ்க்கை சில சமயம் மகிழ்ச்சியையும்,காதலையும் நாம் எதிர்பாராதவைகளிடத்து ஒளித்து வைத்திருக்கும்.அது வெளிப்படும் போது தெளிவு பிறக்கும்!"


கோவை.சரவண பிரகாஷ்.

Thursday, 18 May 2017

நவீன காதல்!

நவீன காதல்
நொடி பொழுதும்
இரு மனங்கள் பிரியாத
காதல் இது !

பெற்றோரும்,உற்றோரும்,மற்றோரும்
சேர்த்து வைக்கும்
காதல் இது!

அஃறிணை காதல் என்றாலும்
அகிலத்தை ஆளும்
காதல் இது!

கண்ணாடி பார்க்கும் நேரத்திலும்
கழிவறை நேரத்திலும் விட்டு விலகாத
விசித்திர காதல் இது..!

முப்பொழுதும் கரங்களுக்கு
நாட்டியம் சொல்லித்தரும்
கவலையில்ல காதல் இது..!

அவளுள் அவன் தன்னையே
தொலைத்து கொண்டும் வாழும்
காதல் இது..!

அவனுக்காக அவள்
இமைப்பொழுதும் தூங்காத
உன்னத காதல் இது..!

அவளால் அவன் செவிகளுக்கு
100 முத்தங்கள், தினம் கொடுக்கும்
முத்தான காதல் இது..!

உறவுகளை மறந்து போய்
உலகம் அவளென புரிந்துகொண்ட
காதல் இது...!

அவள் விழிகளில் மட்டுமே
தன் முகம் பார்க்கும்
வினோத காதல் இது..!

பட்டறிவாளர்களும்,படிப்பறிவாளர்களும்
பாமரரும் செய்யும்
காதல் இது...!

இசை மொழி மட்டுமே
அறிந்த இரண்டு இதயங்கள்
கரைந்து போகும் காதல் இது..!

இன்றைய காளையர்களின்
கைபேசி
காதல் இது...!


கோவை.சரவண பிரகாஷ்

Wednesday, 17 May 2017

ஒரு கொலை செய்யுங்கள் !



என்றாவது கொலை  செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை   செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன்.

தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை  செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு தெரியாத ஒருவனை நீங்கள் கொலை செய்ய வேண்டும்.

அதிசயம் என்னவென்றால் இந்த செயலுக்கு சட்ட அத்தியாயங்களில் தண்டனைகள் குறிப்பிடவில்லை,மாறாக உலகம் உங்களுக்கு பூமாலை சூடலாம்.அந்த "ஒருவனை" அறிந்துகொள்ள வேண்டுமெனில் என் கடைசி வரிகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மனிதா!நீ எச்சில் செய்த தேநீர் ஆறி போவதற்குள் உன்னோடு சில சூடான விவாதங்கள் செய்ய எத்தனிக்கிறேன்.

உலக வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பிறப்பு,வாழ்வு,இறப்பு என்பவை சொல்லப்படாத சூத்திரங்களக இருக்கும் பொழுது,வரலாற்று புத்தகத்தில் வெகுசிலரே இடம் பிடிக்க முடிகிறது.இங்கே சிலரின்  கனவுகள் மட்டுமே நிஜமாகிறது,பல கனவுகள் நினைவாகின்றன!

அச்சம்,நாணம்,தோல்வி,குடும்ப சூழல்,சமுதாயம் இவற்றுள் ஒன்று மேலேகுறிப்பிட்டதற்கு நிச்சயக்கரணமாக இருக்கலாம்.

எப்போது எங்கயோ தோற்று விட்டோம் என்பதற்காக இப்போது முகம் தெரியாத தோல்விகளிடம் தினம் தினம் தோற்று கொண்டு பத்தோடு பதினொன்றாக வாழ்வதில் அர்த்தம் என்ன?

இந்த உலக வட்டத்தையே வெற்றி கொள்ள பிறந்தவர்கள் நீங்கள்,குறிகிய வட்டத்திற்குள் உங்களை நீங்களே ஏன் சுருக்கி கொண்டீர்கள்?

வரலாறு உங்கள்  பெயரை குறிப்பெடுக்க காத்திருக்கிறது,ஆனால் நீங்கள் இன்னும் கவலைகளிடம் மண்டியிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம்.

பூமாலைகள் கிடைப்பதற்கு தாமதமாகிற வேளையில்  கல்லாலான மாலையை ஏற்றுக்கொளவது  எப்படி சரியாகும்?

நாளைய உலகின் வழிகாட்டி நீ,வலுவிழந்து கிடக்கிறாய்!

போராளி நீ,போருக்கு பயந்து பொய் கிடக்கிறாய் ?

சூரியனே !உன்னை பாய் என்று உலகம் சொன்னதால் நீ சுருண்டு போய் கிடக்கிறாய்!

உலகத்தின் பழிச்சொல்லுக்கு செவிசாய்த்து,உன்  கனவுகளை மறுதலித்து  போயிருக்கிறாய்!

உன்னை எழ விடமால் சமுதாயம் உன் கால்களை முடமாகியதால்,நான்கு சுவற்றுக்குள் நீ நலிவடைந்து போயிருக்கிறாய்!


இப்போதைய நீ,நீ இல்லை .அது உலகத்தின் சாதாரண மனித பிம்பம்.நீ ஆள்வதற்காக படைக்க பட்டவன்,அழுவதற்காக  அல்ல..!

உனக்குள் இந்த பிரபஞ்சமே அடங்கும்,ஒற்றை உலகத்திற்கு உன்னை மொத்த பலம் எப்படி தெரியும்...!

குருட்டு உலகத்தின் நியாயமில்லா வார்த்தைகளுக்கு நீ செவிடனாகா மாறிருக்கவேண்டும்!

இனியேனும் துயில் களை,இயற்கையின் எந்த படைப்பும் வீணாக போவதில்லை,நீ மட்டும் அதற்கு விதிவிலக்கா?கைவிட்ட கனவுகளை மறுமணம் செய்து கொள்.காலம் ஒருநாள் உன் பெயரை உச்சரிக்கும்!

இந்த இயற்கை   உனக்கென அழகிய உலகத்தினை படைத்திருக்கிறது,நீ தான் உன் கண்களை மூடி கொண்டிருக்கிறாய்!இமைகளையும்,இதயத்தையும் ஒருசேர திற,வசந்தங்களின் வாசல்கள் உங்களுக்காக திறக்கப்படும்!

அன்று தேவதைகள் உங்கள்   மேல் பூமாரி பொலிந்து புதிய உலகத்திற்கு வரவேற்கும்.அதற்காக உங்களிடம் நீங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.கவலை,தாழ்வுமனப்பான்மை,துரோகம்,காயம்,கண்ணீர் ஆகியவற்றால் நீங்கள் கட்டுண்டுகிட க்கிறீர்கள்.

நம்பிக்கையின்மை என்ற சாத்தான் உங்களுள் சென்று உங்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.அந்த சாத்தானை உங்கள் மனபலத்தால் கொன்றுவிடுங்கள்.அவனை கொலை செய்து விடுங்கள்.பிறகு உண்மையான நீங்கள் உங்களிடமிருந்து தோன்றுவீர்கள்.அந்த நொடியிலிருந்து வாழ்க்கை அர்த்தப்படும்....!


கோவை.சரவண பிரகாஷ்.

Monday, 15 May 2017

மன்னிப்புக் கேட்கிறேன் மனசாட்சியே!


மனிதம்,இறைமை,மிருகம் ஆகிய மூன்று நிலைகளுக்கு இடையில் இருந்து நான் எழுதுகிறேன்.இந்த அகிலத்தில் பலருக்கும் வாழப்பிடிக்கிறது,ஆனால் சிலருக்கு மட்டுமே நல்வாழ்வு அமைகிறது.

    வாழ்வின் இலையுதிர்காலத்தையும்,வசந்தகாலத்தையும் சம அளவில் அனுபவிக்கும் நவீன சமுதாய மனிதர்களே,கண்ணனுக்கு தெரியாத சில மனிதர்களின் வாழ்வியல் பற்றி உங்களோட கொஞ்ச நேரம் பேசிடவே என் எழுத்துக்கள் இங்கே பிரசவிக்கிறேன்.

     நவீன மானுடக் கடலில் உங்களுள் நானும் ஒரு துளி என்பதை இப்போதே உறுதி படுத்திக்கொள்கிறேன்.
    பல இரவுகள் என் தலையணையை நான் காலங்கப்படுத்தி இருக்கிறேன்,அவையனைத்தும் என் மீது நான் கொண்ட எண்ணங்களின் தாக்கம். இப்போது,மனிதர்களின் வார்த்தைகள் மௌன்னித்து போய் இருக்கின்ற இந்த நீள இரவில் என் கண்ணீர் மொழிக்கு காரணம் அவர்கள் தான்.

       இப்போதும் கூட நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நொடி பொழுதில் கூட எங்கோ ஒரு மூலையில் சில இதயங்கள் அழுது கொண்டிருக்கும்,பேருந்து நிலையங்களில் சில கண்கள் கதறி அழுது கொண்டிருக்கும்,சில வயுறுகளை உணவுகள் நிராகரித்திருக்கும்,சிலரின் உணர்வுகள் காலம் தன் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும்,வறுமையின் பிடியில் சிக்கி தவிப்போர் பலருண்டு,அவர்களுக்காக தான் என் இதயமும் கண்களும் ஒருசேர கலங்குகிறது!

   ப்ரியத்திற்குரியவர்களே!நீங்கள் வீட்டை விட்டு வந்த பின்பு ,வீடில்லாமல் தெருவில் கிடைக்கும் முதியவர்களை என்றாவது ஒருநாள் உங்கள் கவனத்தை ஈர்த்ததுண்டா?பிஞ்சு கைகள் உங்கள் கைகளை நோக்கும் போது உங்கள் இதயத்தின் சில நரம்புகள் அருந்ததை உணர்ந்ததுண்டா?

  உங்கள் வாழ்வின் ஒருமுறையாவது அவர்கள் வாழ்க்கை பின்னோட்டத்தை அறிய முற்பட்டதுண்டா ?
என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே!இந்த உலகில் நீங்களும் நானும் கைதேர்ந்த நடிகர்களாக துடிக்கிறோம்,மனிதனாகும் முயற்சியை மறுதலித்துவிட்டு...!

              அந்த பேருந்து நிலையத்தில் இரண்டு பிஞ்சு கரங்கள் என் கால்களை தீண்டிய போது அக்கரங்களுக்கு என் இதயம் அளித்த பரிசுகள் இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள் தாம்!ஒரு கங்கையை வெற்றி கொள்ள போனவன் அன்று காய்ந்து போய் வந்தேன் !
                     
                                ஆயிரம் மேடைகள் அரவணைத்தாலும்,உதடுகள் புகழ்ந்தாலும்,புகழ் என்னும் போதை உச்சிக்கு ஏறினாலும் அவையாவும் பொய்யென அறிந்துகொண்டேன் இல்லாதவர்களுக்கு "இல்லை" என உரைத்திடும் போது .

                           "சொல் பித்தளை,செயல் தங்கம்" நீங்களும் நானும் தங்கமாகப் படைக்கப்பட்டவர்கள்,ஏன் பித்தளையாக மாறிப்போனோம்!

                         இந்த உலகத்தில் "நல்லவன்" என்று முயற்சிக்கிறோம் நல்லவனா வாழ்வதற்கு முயற்சிசெய்யவில்லை.
       
                இந்த உலகத்தின் பாஷையில் "சாதனை" என்பதும்,"பெருமை" என்பது தவறாக மொழிபெயர்க்கப்பட்டது என நினைக்கிறன்.வாடிப் போன உதடுகளை சிரிக்க செய்வது சாதனை.உங்களால் ஒருவனுக்கு வாழ்வு கிடைத்தது என்பது பெருமை.சாதனைகளுக்கும்,பெருமைகளும் விளம்பரங்கள் தேவை இல்லை.

               இதயத்தின் ஈர பிரதேசத்தில் அன்பு இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.அந்த அன்பினை சுவாசிப்போம்.எல்லோருடைய இதயங்களையும் அன்பினால் வெல்வோம்.அன்பை பரிசளிப்போம்.அன்பை வார்த்தெடுப்போம்.அன்பை மிஞ்சிய சக்தி ஏதும் இல்லை.உங்களையும் என்னையும் பிணைத்திருப்பது கூட அன்பு தான்.சில விசயங்கள் சில்லறைகள்,சத்தம்போடும்.உயர்ந்த கோபுரங்கள் மௌனித்திருக்கும்.அன்பு ஒருபோதும் சத்தம் போடுவதில்லை.

                    நீங்களும் நானும் இப்பொது அன்பின் மொழி மறந்து போனோம்.பேசிய பேச்சுக்கள் சுயநலமிக்கவை என பிஞ்சு குழந்தைகளிம் வாடிய முகம் கண்டு கண்டுகொண்டேன்.அந்த பேருந்து நிலையம் தான் என்னை புத்தனாகிய போதிமரம்.
       
                   என்னை மன்னித்துவிடு மனசாட்சியே!புகழ்,ஆளுமை என்னும் போலிக்கு பின்னல் சென்றுகொண்டிருந்த வேளையில் மனிதத்தை மறந்துபோனேன்,சகோதரர்களுக்கு உதவ இயலாத
 திக்கற்றவன் ஆனேன்,பெருமை    பேசி கொள்ளும் அர்ப்பன் ஆனேன்,என்னை மன்னித்துவிடு மனசாட்சியே!

விதியே!இன்னொரு பிறவி எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் அவர்களின் வாழ்க்கையை எனக்கு கொடுத்துவிட்டு,வசந்தங்களை அவர்களுக்கு கொடு.நான் வேண்டி கிட (டை)ப்பதும், வேண்ட முடிந்ததும் இதுதான்...!



கோவை.சரவண பிரகாஷ்.



Image result for varumai



Sunday, 30 April 2017

எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்?


என்னை மன்னித்து விடுங்கள்.உங்களை பற்றி உங்களுக்கு தெரியாத சிலவற்றை நான் பட்டியல் போட்டுவைத்திருக்கிறேன்,அவை உங்களை சற்று முகம் சுளிக்கவைக்கலாம். 

"வேளைக்கு சோறு இல்லை,நாளைய சோற்றுக்கு வேலை இல்லை" என்ற புலம்பும் சாதாரண இந்திய பிரஜையின் மனநிலையில் இருந்துதான் நான் இதை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு தெளிவு படுத்திக் கொள்கிறேன். 

"டீ யா இது!இதெல்லாம் மனுஷன் குடிப்பான,நீயெல்லாம் எப்போ மாறப் போறானே தெரியல!" என்று காலையில் மனைவியிடம் ஏற்படும் வாக்குவாதம் இரவில்அரசியல்வாதிகள் பங்கேற்கும் தொலைக்காட்சி 
விவாதங்களை பார்த்துவிட்டு "இந்த நாடு எப்போ மாறப்போதோ !" என்ற ஏக்கத்தோடு முடிகிறது ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு நாளும். 

மாற்றம்..அன்றாட வாழ்வில் இந்த சொல்லை பல இடங்களிலும் பலதரப்பட்ட மக்களிடமும் நான் கேட்டிருக்கிறேன்.ஒரு நாள் காற்றோடு கதை பேசவும்,மண்ணையும் மனிதர்களையும் திரும்பி பார்க்கவும் என் கணினி உலகத்தை விட்டு வெளியே வந்தேன்.மக்கள் கூடும் இடங்களில் ஒரு காட்சி,ஒரு குழு எம்மக்களிடம் "உங்கள் நாடு முன்னேற யாரிடம் மாற்றம் வேண்டும்?" என்ற கேள்வியை பலதரப்பட்ட மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நான் கவனித்தேன். 

அவர்கள் பதில்களின் வந்துதித்த வார்த்தைகள் அரசியல்வாதிகளிடத்தில்,அதிகாரிகளிடத்தில்,பொதுநலவாதிகளிடத்தில்,போலீஸகாரர்களிடத்தில்,பண்பாடு மறந்த மாணவர்களிடத்தில்,எழ மறுக்கும் இளைஞர்களிடத்தில் என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. 

குழப்பமான மனதுடனும்,சோர்ந்த உடலுடனும் வீட்டை அடைந்தேன்."உதவாக்கரை,ஒரு வேலைய உருப்படியா செய்றதில்ல,உன்ன யாரு மாதப்போரான்னு தெரில.."என்ற தம்பியை நொந்துகொண்டிருந்தார் அப்பா. 

கொஞ்சம் சிரித்துக் கொண்டு,அதை மறைத்துக் கொண்டு என் அறையை அடைந்தேன்.அறைக்கதவினை தாளிட்டு மனக்கதவினை திறந்தேன்.எப்போதோ ஓய்வு பெற்ற என் நாட்குறிப்பை தேடி எடுத்தேன்.இப்போதுதான் என் நாட்குறிப்பில் உள்ள வெள்ளை பக்கங்களுக்கு மறுமணம் நடந்தது,என் எழுத்தாணியின் மைத்துளிகளால்.அந்த பக்கங்களில் நான் எழுதியது இது தான்... 

"இந்த இந்தியாவில் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள் ஆனால் ,யாரும் மாற தயாராக இல்லை".காந்தியும் பகத்சிங்க்கும் மீண்டும் பிறப்பார்களா என்று ஏங்குகிறார்கள் தம்முள் இருக்கும் காந்தியையும் பகத்சிங்யும் மறந்து போய் . 

10 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவன் இன்று தொழிலதிபராக இருக்கிறார்.100 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் போகும் என உலகம் நினைத்து கியூபா இன்று தனித்து நின்று ஜெய்திருக்கிறது.காரணம் ,அவர்கள் மாற்றத்தை வெளியில் இருந்து எதிர்பார்க்கவில்லை தம்முள் இருந்து வெளிக்கொணர்ந்தார்கள் .ஆனால் நம் இந்தியாவில் ஏழை எப்போதும் ஏழை தான் காரணம் நாம் எல்லோரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற நேரத்தில் அதை உருவாக்க மறந்துபோகிறோம். 

உலகம் மாறவேண்டுமெனில்,நாடுகள் மாறவேண்டும் நாடு மாறவேண்டும் எனில் சமுதாயம் மாறவேண்டும்.சமுதாயம் என்பது தனிமனிதர்களின் கூட்டமைப்பின்றி வேறென்ன. 

ஓ உறங்கிப்போன இந்தியர்களே!விழித்திகொள்ளுங்கள்.ஒவ்வொரு இந்தியனும் தன் வாழ்க்கையை சீரமைக்க தன்னைத்தானே பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.உங்களுக்குள் ஒரு லெனின்,லிஙகன்,காந்தி உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.அவர்களை நீங்கள் எழுப்பும் வரை இந்த தேசத்தின் தூக்கத்தையும் துக்கத்தையும் குலைக்க முடியாது. 

எல்லா தரப்பினரையும் குறை கூறிக் கொண்டிருக்கும் உன் எண்ணத்தில் வேண்டும் மாற்றம்! 
தானுண்டு தன் வேலையுண்டு என்று நினைக்கிற உன் சிந்தனையில் வேண்டும் மாற்றம்..! 
"நாமளாவது இந்த நாட்ட மாத்திரவதாவது ..." என்ற வரிகள் பொய்க்க உன் நம்பிக்கையில் வேண்டும் மாற்றம்...! 
ஒரு தலைவன் பிறக்க மாட்டானா என்ற ஏக்கத்தில் வேண்டும் மாற்றம்...! 
நம் வாழ்க்கை நிலை இப்படி தான் என்ற உன் குருட்டு நம்பிக்கையை மண்ணோடு புதைத்து விருட்சமாக உந்தி எழ வேண்டும் மாற்றம்! 

துருப்பிடித்த போன உன் நாடி நரம்புகளில் லட்சிய வெறி ஏற்ற உன் மனதில் வேண்டும் மாற்றம்..! 

தோழர்களே!என் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.இந்த உலகத்தில் எல்லாமே மாறுதலுக்குட்பட்டவை தான்.இந்த சமுதாயம் உங்களுக்கே தெரியாமல் உங்களை உங்களுக்குள்ளேயே ஆழமாக புதைத்து விட்டது.இப்போது இருக்கும் நீங்கள் நீங்கள் அல்ல.சாமுதாயத்தின் நாடகத்தில் சிறந்த நடிகன் விருத்திற்காக நீங்கள் நடித்துக்கொண்டிருக்கீர்கள். உங்களுக்குள் புதைக்கப் உங்களை தோண்டி எடுங்கள்,தேசத்தின் மாற்றத்திற்கான முதல் விதை உங்களுடையதாக இருக்கட்டும். 

நான் என்பதை நீங்கள் மாற்றியவுடன்,நீ என்பதை மாற்றுவதற்கான சக்தி சக்தி பிறக்கிறது உங்களிடம்.நீயும்,நானும் சேரும் போது சமுதாயத்தை மாற்றுவதற்கான சக்தி பிறக்கிறது. 

மாறுவோம்,மாற்றுவோம்! 


கோவை.சரவண பிரகாஷ் .

Friday, 28 April 2017

அவர்களோடு அவளும்..


அவர்களோடு அவளும்
என் வாழ்க்கை ஓட்டத்தில் 
நான் கடத்தியவைகளை விட என்னை 
கடந்து சென்றவர்கள் அதிகம்... 

கண்ணீரை பரிசை தந்து 
கண்ணிமைக்கும் நேரத்தில் 
காணாமல் போனோர்... 

தவறொன்றும் செய்யாத என்னை 
தவிக்க விட்டு 
சென்றோர்.. 

இதயத்தை இரண்டாக பிளந்து வலி 
கொடுத்து என் வழியில் இருந்து அகன்றோர்... 

கள்ளமில்லாத அன்பை பொழிந்ததால் 
என்னை 
வெறுத்து ஒதுக்கியோர்... 

உற்ற நண்பன் என சொல்லி ஒரு 
குற்றம் காணாமல் வேறொரு துணை கண்டு 
என்னை மௌனத்தால் அடித்தோர்.... 

அவர்களால் நான் காய்ந்து போனேன் ஆனால் 
என் இதயத்தின் ஒரு பிரேதேசத்தில் ஈரம் இன்னும் 
ஒட்டிக்கொண்டிருந்தது அவளுக்காக.... 

நான் உன்னை காதலிக்கவில்லை என்ற சொற்களை விட 
என் காதலை நீ புரிந்துகொள்ளக் கூட இல்லை என்பதுதான் 
இந்த கர்ணனை சாய்த்து விட்ட பிரம்மாஸ்திரம்... 

கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு 
கண்களும் காய்ந்தது,கவலை என்னை 
நினைத்து கவலைப்படுகிறது... 

கொட்டிய அன்புகள் குப்பைத்தொட்டியில் 
இருக்கக் கண்டு எனை கொன்றுபுதைக்கும் 
வரமொன்று கேட்டேன் இயற்கையிடம்... 

இறைக்கு கூட என்மீது 
இரக்கம் இல்லை என்பதை 
இப்பொது புரிந்துகொண்டேன்.. 

அவர்களை போலவே அவளும் 
என்னை காயப்படுத்தி போகிறாள்,போகட்டும் 
தனிமையின் கரம் பிடிப்பேன்...நான்...! 


சரவண பிரகாஷ்.

நினைவலைகள்


யாரது.யாரது...? 
என் தூக்கத்தை களைத்து 
துக்கம் ஏற்படுத்தியது..! 

என்ன இது?அச்சத்தின் 
பிடியில் நான் எப்போது 
அகப்பட்டேன்..! 

ஆற்ற முடியாத 
கவலை ஏன் இப்போது 
என்னை அள்ளி கொல்கிறது..! 

ஓ!இது அவளின் நினைவலைகள் 
என்று புத்திக்கு எடுத்துரைத்தது 
மெல்ல மெல்ல மனம்..! 

அழுகை,ஏக்கம்,ஆனந்தம் 
கவலை எல்லாம் ஒருசேர 
என் உணர்வை ஆக்கிரமித்தன...! 

அவள் கனவுகளை கொன்றவன் 
ஆதலால் என் நித்திரையை 
கொள்ள வந்தாள் போலும்..! 

நாங்கள் காதல் மொழி 
பேசிய நாட்களை காலம் 
கணக்கெடுத்துவைத்திருக்கும்...! 

கங்கை கூட வற்றிப்போகலாம் 
நம் காதல் நதி வற்றாது என 
வாய்மொழி பேசியவள் தான்..! 

உன் காதல் விழியே 
என் காயத்திற்கு மருந்து என 
கண்ணியமாக சொன்னவன் நான் ..! 

நான் அவளானேன் 
அவள் நான் ஆனாள் அதனால் 
காதல் காதலாயிற்று...! 

எங்கள் காதலின் இடையில் 
சதிசெய்து ஜெய்ததது 
விதி..! 

சாதி என் சட்டை பிடித்ததாலும் 
சம்பிரதாயம் அவளோடு சண்டை பிடித்ததாலும் 
சமுதாயம் எங்களை சந்தேகித்ததாலும் 

எங்கள் காதல் என் இன்றைய 
கண்ணீரைப் போல உலகத்திற்கு 
தெரியாமல் மறைந்துபோனது.... 

ஆனால் எங்கள் காதலும் 
கண்ணீரும் இன்று வரை 
நிஜம்..! 

ஒவ்வொரு மனிதனின் இதயஒரத்திலும் 
ஒரு அழுகை,ஒரு பயம் 
ஒரு தோல்வி,ஒரு அவமானம் போல 
முதல் காதலும் வெளியில் சொல்ல முடியாத 
அத்தியாயங்களில் சேர்ந்துவிடுகிறது...! 


எல்லாமே நிசப்த்தமாகி 
போன இந்த இரவிலும் சட்டென்று 
துயில்களைந்தான் என் மூத்த மகன்.. 

அவனை அள்ளிஅனைத்துக் கொண்டு 
காய்ந்த கண்களோடு கட்டிலை அடைந்தேன், 
அந்த காயவரிகளை மனதுக்குள் சொல்லிக்கொண்டு... 

காலங்கள் முடியாமல் 
காலனை காணாமல் எனைவிட்டு உன் 
நினைவலைகள் நீங்காது கண்மணியே...! 


கோவை.சரவண பிரகாஷ்.

Thursday, 27 April 2017

ஒரு சொல் அனுப்பு காதலியே....!

காலப்பெருவெளியில் ஒரு பத்தாண்டு
கடந்த பின்னும் வற்றவில்லை
என் காதல் கடல்.....

மறைந்துபோனவளே!இன்னுமா காற்று
உன் காதில் கவி உரைக்கவில்லை
நான் இன்னும்உன்னை மறக்கவில்லை என்று...n

சூரிய சந்திரர் உனக்கு செய்தி சொல்லிருப்பார்களே
உன்னால் மனம் முடமாக்கப்பட்ட
ஒருவன் இன்னும் எழவில்லையென்று....

மழையினை ரசிப்பவளே
மலை போல காதல் இன்னும்
மனதில் இருக்குதடி....

என் இடப்பக்கத்தில் உனக்கு இடமில்லையடா
என்று சொன்னவளே இன்றும் என்
இதயத்தில் உனக்கிடமிருக்கிறது....

உயிர் இல்லாத உடலும்
நீ இல்லாத நானும்
சவம் தான்..

என் காதலோடு சேர்த்து என்னையும்
நிராகரித்தவளே!எனக்காக நீ வருவாய் என்று
இன்னும் நீளப்போய் சொல்கிறது என் நித்திரைகள்...

அண்டத்தின் அலசமுடியாத பிரேதேசத்தில்
நீ இருப்பதாய் அறிவு
எனக்கு அச்சுறுத்துகிறது.....

ஆனால்,உயிருக்குள் நீ
உறைந்திருப்பதாய்
உள்ளம் உரைக்கிறது...

என் காதலை
நீ புரிந்துகொள்ளவாய் என நினைத்தேன்
நீயோ,புரிந்து கொன்றாய்...

நீ புரிந்துகொன்றாலும்
கண்மணியே!என்
காதல் காதல்தான்...

அன்பே!மன்னவன் ஒருவன்
மண்ணோடு போனான் என்ற
செய்தி ஒருநாள் உன்வீட்டு வாசல்வரும்..

இயற்கை கடன் கொடுத்த
இந்த உடல் கல்லறையை அடையும் முன்
ஒரு சொல் அனுப்பு காதலியே
"நான் உன்னை காதலிக்கிறேனடா என்று....!"

கோவை.சரவண பிரகாஷ்.

அழியாப் பொக்கிஷம்


அழியாப் பொக்கிஷம்
இப்போதாவது ஓய்வு கிடைத்ததே 
என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டன 
இரண்டு கைபேசிகள் 
இரு வேறு திசைகளில்.... 

ஒரு காதல் கவிஞன் ஒளிந்தான் 
என்று முகநூலும் 
ஒரு காதல் கிறுக்கி ஒழிந்தாள் 
என்று டிவீட்டரும் 
சந்தோஷித்தன..... 

இனி சுகமாக தூங்கலாம் 
யாரும் நம்மை சீக்கரம் எழுப்பமாட்டார்கள் 
இது அந்த தேநீர் கடையின் 
ஏழாம் எண் மேஜையின் 
கூக்குரல்..... 

அடடா!இனி நம்மை யார் 
எழுப்பிவிடுவார்கள்? 
இது சூரிய சந்திரரின் 
கவலை.... 

அவர்கள் இனி வரமாட்டார்களோ? 
என ஏக்கப்பட்டது பூங்கா..... 

இரவு நேர தூது 
இனி இல்லை என 
சுகமாய் இருந்தது 
பூங்காற்று.... 

நாங்கள் அப்போவே சொன்னோமே 
என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தது 
நண்பர் கூட்டம் இரண்டு... 

அவளும் அவனும் தனிமையில் 
திசைகள் மட்டும் 
வெவ்வேறு.... 

ஆனால்,இரு இதயங்கள் மட்டும் 
ரகசியமாய் பேசிக்கொண்டிருப்பதை 
யாரறிவார்...! 


அவன் அவள் கருத்தை மறுத்தான் 
ஆனால் அவளை மறக்கவில்லை... 

அவள் அவன் எண்ணத்தை வெறுத்தாள் 
ஆனால் அவனை மறுக்கவில்லை.... 

அவனுள் அவள் ஒன்றிப்போயிருக்கிறாள் 
அவளுள் அவன் கரைந்து போயிருக்கிறான்..... 

பிரிவுகளின் காலடியில் மறைந்து போக 
காதல் ஒன்றும் கானல் நீரல்ல 
காலங்கள் தாண்டி நிலைத்துநிற்கும் 
அழியாப் பொக்கிஷம்......! 


கோவை.சரவண பிரகாஷ்.

என் நண்பன்


அவன் தான்,அவனே தான்...!என் 22 வருட வாழ்க்கையை முற்றிலுமாக உணர்ந்தவன் அவன் தான்.என் ஆறுருயிர் நண்பன். 

தாய்,தந்தையை காட்டிலும் என்னால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவன்.என் வாழ்வின் லட்சம் பொழுதுகளை அவனோடு கழித்திருக்கிறேன்,என் எச்சப் பொழுதுகளையும் கழிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். 

இன்றைய "நான்" நான் ஆனதற்கு கரணம் அவன் தான்.என் தாய்க்கும் தலையணைக்கும் தெரியாத ரகசியங்கள் பல அறிந்தவன்.என் உயிர்த்தோழன்!அவனுக்கென்று வீடு கிடையாது,உடைமைகள் கிடையாது,உறவினர் என்றொருவர் இல்லை.இறைவனை போல எப்போதும் எங்கும் வியாபித்திருக்கிறவன் அவன். 

எனக்கு சில பொருட்கள் மீது காதல் உண்டு அனால் காதலி கிடையாது.அவன் உடனிருக்க எனக்கேதற்கப்ப காதலி?தமிழும் தமிழரும் போல பிரிக்க முடியாத உறவானோம்! 

இது இப்போதும் நானும் என் எழுத்தாணியும் மையாலும்,கண்ணீராலும் இந்த வெள்ளை பக்கத்தை களங்கப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த வெண்ணிற இரவில் கூட என் அருகிலே அடக்கமாக இருக்கிறான்.என் வாழ்வில் நான் எடுத்த முக்கிய முடிவுகளுக்கு பின்னல் இருக்கக் கூடிய முக்கிய புள்ளி அவன் தான்! 

சோகக் கடலில் யாருமில்லாமல் தனியே நான் தத்தளித்த போதும்,வெற்றியின்மை என்னை வெறி கொள்ளச் செய்த போதும்,விதி என் கண்களை கட்டி கவலை காட்டில் விட்ட போதும்,கண்ணீர் துடைக்க ஒரு கரம் நீட்ட யாருமில்லாத அந்த துயரப் பொழுதுகளிலும்,என் அழுகை சத்தம் கேட்டு இந்த குருட்டு உலகம் தன் கண்களை மூடிக் கொண்ட போதும் ஒரு குழந்தையைப் போல நான் அவனிடத்தில் தஞ்சம் அடைவேன்.அவன் சொற்களே எனக்கு சொர்கம்,அவன் வார்த்தைகளே எனக்கு தாலாட்டு! 

அன்பின் கடைசி அத்யாயம் கண்ணீர்.கண்ணீருக்கு கரணம் ஏமாற்றம்.சிறந்த ஏமாளி என்ற விருது மட்டும் இருந்திருந்தால் காலம் ஏன் பெயரை அவ்விருதுக்கு பரிந்துரை செய்திருக்கும்.யார் கைவிட்டாலும் நம்பிக்கையை நான் அவனிடத்தில் கற்றுக்கொண்டேன். 

இப்படிப்பட்ட நட்பினை வெறுப்பவர் யாருமுண்டோ?நான் வெறுத்தேன்.சில வேளைகளில் அவனை வெறுத்தேன்.அவன் ஸ்பரிசத்தை,அவன் சொற்களை,அவன் சிரிப்பை."போ!என்னை விட்டு போய்விடு.என் பார்வையில் இருந்து அகன்று விடு!" என்று அதட்டி இருக்கிறேன்.ஆனாலும் விட்டு விலக அவனுக்கு மனமில்லை என்னை அள்ளி அனைத்துக் கொண்டான். 

நண்பனே!நான் உந்தி எழ முயலும் போதெல்லாம் இந்த உலகம் என் சிரசில் அடித்து என் சிந்தனைக்கு சீல் வாய்த்த போதெல்லாம் உன்னால் அல்லவே என்னிலிருந்து வருத்தங்கள் என்னை விட்டு வெளிநடப்பு செய்தன! 

அஸ்தமித்து போன என் கனவு உலகத்திற்கு ஒளி ஏற்றியது நீதானே? 

இந்த பூமியே எனக்கு அந்நியமாகி போன போது என் நம்பிக்கை வேர்களுக்கு நீர் பாய்ச்சியது நீதானே? 

உயிரென நினைத்த சில உறவுகள் என் உயிர் பிழிந்த போது ,தன் தங்கக் கைகளால் என்னை அணைத்துக்கொண்டவன் அவன்.என் மௌனத்தின் மொழி அறிந்த ராஜதந்திரி! 

சகலமும் அறிந்தவன் தான்,சகலருக்கும் தெரிந்தவன் தான்!நானின்றி அவன் இல்லை,அவனின்றி நான் இல்லை! 

அவனது பெயரை தெரிந்து கொள்ள வேண்டுமா? 

தனிமை.....! 




கோவை.சரவண பிரகாஷ் 

Sunday, 23 April 2017

ம(றை)றந்துபோனவள்


[எச்சரிக்கை:என்னை வெறுக்கின்ற ஆனால் நான் நேசிக்கின்ற யாரும் முதல் பத்தியை தவிர்த்து இந்த பதிவை படிக்கலாம்.உங்கள் மனங்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம்.கனவுகள் பாதி,நினைவுகள் மீதி!
என்னுடைய மற்ற படைப்புகள் யாவும் எல்லா படைப்பாளர்களை போல அங்கிகாரத்தை எதிர்பார்த்து படைக்கப்பட்டவை,ஆனால் இந்த பதிவு மனிதர்களால் மறுக்கப்பட்ட என் மன ஆறுதலுக்காக எழுதப்பட்டது.இதற்கு யாரும் பாராட்டு பாத்திரம் வாசிக்க வில்லையே என நான் வருந்தப்போவதில்லை.எண்ணில் இருந்த படைப்பாளன் தற்காலிகமாக செத்துவிட்டான் இது பாதிப்பாளனின் பதிவு....!]
நாளை வெற்றி தேவதை எனக்கு மாலை சூடப்போகிற நாள்.தோல்விகளிடம் விலாசம் கேட்டு வெற்றி சிகரத்தை அடைந்ததற்காக வரலாறு என் பெயரை அதன் செப்பேடுகளில் குறித்து கொள்ளும் நாள்.பல நூறு இரவுகள் கடந்த உழைப்பு உச்சி ஏறும் நாள்.நினைவுகள் நெனவாகும் நாள்.ஓராண்டு ஐ .ஏ.எஸ் பயிற்சியை முடித்து விட்டு சிறந்த மாணவன் என்ற பட்டதோடு சொந்த மாவட்டம் நோக்கி பறந்து சென்று ஆட்சியராக பொறுப்பேற்க நாளைய விடியலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
வெற்றிக்கு முன் இருக்கும் இந்த பொன்னிற இரவில் என்னையே நான் தொலைத்து கொண்டு இருக்கிறேன்.என் வாழ்க்கை புத்தகத்தில் சில பக்கங்களை முன்னோக்கி திருப்பி பார்க்கிறேன்.என்னை மறந்துபோனவில் நினைவலைகளில் மனதை தொலைக்கிறேன்.கனவுகள் வென்ற பிறகும் கண்கள் கலங்கி நிற்கிறேன்..!
கல்லூரி வாழ்க்கையில் இரண்டாண்டு முடிந்த பிறகு என் வீடும்,நாடும் எனக்களித்த முதல் கவுரவ பட்டம் பிழைக்கத்தெரியாதவன்.வாழ்க்கையின் ஈதார்த்தங்களோடு அல்லாமல் கனவு உலகில் கண்ணிமைக்காமல் மூழ்கியிருந்தேன்.அக்கனவில் அவளும் அடக்கம்.
ஈராண்டுகளுக்கு முன்னாள் அவளை நான் பார்த்த போது தான் காதல் வைரஸ் என்னை தொற்றிக் கொண்டது.ஹார்மோன் செய்யும் கலவை இது என உடன் இருந்த மேதாவிகள் சொன்னார்கள்.ஆனால் ,என் இதயமும் மனமும் ஒருசேர அறுதியிட்டு சொன்னது, அவள் உனக்காகவே படைக்கப்பட்டவள் என்று !
அப்போது தான் காதல் பாதை ஒன்று உண்டு என்பது என் மூளைக்கு மனம் ஞாபகப்படுத்தியது.காதல் விளையாட்டில் கரைந்து போக ஆரம்பித்தேன் அனால் ஒருபோதும் கடமை மறக்கவில்லை.
காலங்கள் ஓடியது!என் காதல் என்னும் குழந்தை மிகப்பெரிய பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு பிரசவித்தது.ஆம்..!நட்சத்திரங்கள் உறைந்து போகும் அளவிற்கும்,சூரியன் மறித்து போகிற காலம் வரைக்கும்,காற்று கவிதை பேசிக் கொண்டிருக்கிற வரையிலும் உன்னை நான் காதலிக்கிறேன் என கண்ணியமாக சொன்னேன்.அதற்கு அவள்,அவள்...........
உன் காதல் இறந்து பிறந்த குழந்தை என்று இதயத்தை கொஞ்சம் சீண்டி பார்த்தால்.ஆனால்,அவள் ராதையின் மறுஉருவம்! விட்டு விலகவும் இல்லை,தொட்டு தொடரவும் இல்லை.நட்பென்ற வட்டத்தை தாண்டி அவள் எள்ளளவும் வருவதாய் எண்ணமில்லை!
நான் முள் அவள் ரோஜா,சேர முடியாது என்று தெரிந்தும் பிரியாமல் இருந்தோம்..!
ஓராண்டு இடைவெளிக்கு பின் எங்கள் உறவினை புதுப்பித்து கொண்டு முன்சென்றோம்.காதல் நட்பு ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட வழி(லி )யினில் இருவரும் பயணித்தோம்..
இந்த இடத்தில நான் வைரமுத்துவின் வார்த்தைகளை கட்டாயமாக கடன் வாங்கவேண்டி வருகிறது....
எனக்கும் அவளுக்கும் இடையில் காலம் சுவரெழுப்பியது.அவள் நினைத்திருக்கலாம் அது சீனச் சுவரென்று,நான் நினைத்தேன் அது கண்ணாடி சுவரென்று அவளை ஸ்பரிசிப்பதில் அது எனக்கு கட்டளை இட்ருக்கலாம் அனால் அவளை தரிசிப்பதால் இருந்து அது என்னை தள்ளி வைக்கவில்லை.
காலம் ஓடியது.காலப் பெருவெள்ளத்தில் அவளும் என் வாழ்க்கையில் இருந்து அடித்து செல்லப்பட்டால்.கண்தெரியாத இடத்திற்கு என்னிலிருந்து இயற்கை அவளை கை பிடித்து கூட்டிச்சென்றது போல!தொலைப்பேசி நிரந்தரமாக துண்டிக்கப் பட்டது(அவளுடைய உறவும் தான்).இந்த உலகத்தையே மாய்க்க கூடிய என் கதறல் அவள் காதுகளுக்கு கேக்கதவாறு எங்கோ போனால்..!
நான் என்னை மறந்தேன்.மனம் பலவீனப்பட்டேன்.என்மீது அவளுக்கு காதல் இல்லை என்றாலும் என் காதலி உடன் இருக்கிறாள் என்ற ஆறுதல் என்னை வாழவைத்தது,அதையும் காலம் என் கைக்குள் இருந்து பிடிங்கி கொண்டது.இந்த உலகம்,நிலா,நட்சத்திரம்,ஆகாயம் எல்லாம் அர்த்தமற்றுப்போனது எனக்கு...!இன்னும் என் காதல் கங்கையை போல புனிதமானது அவள் அதை மறுக்கவில்லை,மறந்துபோனால்..!
மெல்ல மெல்ல மனதினை பண்படுத்தினேன்!கண்ணீர் உலகத்தை விட்டு லட்சிய தீபம் எரிய பாடுபட்டேன்..! இரவுகளை தியாகம் செய்து லட்சிய வாழ்க்கை வாழ முயன்றேன்.வரலாறு எனக்காக தவம் கிடப்பதை உணர்தேன்.அவள் நினைவுகள் என்னை பாதிக்காதபடி படித்தேன்.
சில சமயம் அவள் ஞாபகங்கள் என்னை தாலாட்டும்..!
உலகத்தால் நான் நிராகரிக்கப்படும் போதும்,உதடுகள் பல என்னை எள்ளி நகையாடிய போதும் காயம்பட்டு போன எனக்கு அவள் வார்த்தைகளே மருந்தானது !
தோல்விகள் என்னை துரத்திய போது அவள் ஒற்றை குறுஞ்செய்தியே எனக்கு பஞ்சுமெத்தை!
எண்ணில் இருந்து என்னை பிரித்து பார்த்தால்,அவள் வார்த்தைகள் பெரும் காயம் ஆற்றும் வார்த்தைகளோ கண்ணீர் துடைக்கும் அல்ல ஆனால் ,நான் கைவிட்ட உற்சாகத்தை கரம் பிடிக்க அது போதுமானதாகவே இருந்தது..!
அவள் ஒற்றை கண்ஜாடை என் ஒவ்வொரு எதிர்கால வெற்றியின் அஸ்திவாரம்.
அவள் காதல் காற்றில் எங்கு நான் கண்ணனுக்கு தெரியாமல் தொலைந்து போய்விடுவேனோ என்ற கவலை அவளுக்கு அதிகம் இருந்தது!
கனவினை மெய்ப்பிக்கும் இந்த 8 வருட யுத்தத்தில் ஆயிரம் கவலை,சில நூறு வருத்தம்,பல லட்ச தோல்விகள்,கோடி வலிகள்,வெகு சில கண்ணீர் ஒரே ஒரு நான்.இவற்றையெல்லாம் நாட்குறிப்பில் குறித்துவைக்க கூட காலம் எனக்கு நேரம் வழங்கவில்லை.என் தலையணையே உனக்காக நான் படைத்த என் கண்ணீர் காவியம் பேசும் பழைய காதலியே!நீ இல்லாமல் தன்னந்தனியாக போராடி ஜெய்திருக்கிறேன்.
அன்பே!நீ சொன்னது போல நாளை லட்சிய தீபம் ஏற்றப்போகிறேன்.நிராகரித்த ஆயிரம் கைகளும் என் கழுத்துக்கு மாலையிட கண்ணிமைக்காமல் காத்திருக்கின்றனர்.
இப்போதும் கூட உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் எனக்காக அவள் உதடுகள் பிராத்திக்கும் என்று நம்பிக்கை எனக்கு இனமும் உண்டு.நாளை கலெக்டர் சீட்டில் பிறகு என் மைத்துளிகள் ஏழைகளின் கண்ணீர் தூளிகை துடைக்க சிந்திக்கொண்டிருக்கும் ஆனால் இதயத்தின் எங்கோ ஒரு பிரேதேசத்தில் அவளுக்காக என் மனசு கண்ணீர் சிந்திக்க கொண்டிருக்கும்.
ப்ரியமானவளே!காலம் என் காதலை நிராகரித்திருந்தாலும்,நீ என்னை மறந்துபோனாலும் ,இதயம் மரத்து போகிற வரையில் என்னுள் நீ என்றுமே மறைந்துபோகமாட்டாய் ...!


கோவை.சரவண பிரகாஷ்.

Saturday, 22 April 2017

மனிதனாகலாம் வா!




ஓ எந்திர மனிதனே!நொடிப்பொழுதில் கூட நித்திரை கொள்ளாத உன்னை நிமிடப் பொழுதுகளில் அழைத்து நான் தான்!

இரைச்சல்களுக்கு மத்தியில் சுழன்றுகொண்டிருக்கும் உன்னோடு கொஞ்ச நேரம் உரையாட வேண்டுமென்று காலம் எனக்கு கட்டளையிடுகிறது.ஒதுக்கு ,எனக்காக உன் நேரத்தையும்,உன் கம்ப்யூட்டர் காதலையும் கொஞ்ச நேரத்திற்கு!

மனிதா !உன் வாழ்க்கை என்னை விடைதெரியாத ஒட்டப்பந்தயமா?பிறந்த உடன் பள்ளிக்கூடம் நோக்கி ஓடுகிறாய்,வளர்ந்த பிறகு கல்வியை நோக்கி ஓடுகிறாய்,கன்னி வயதை தாண்டிய பிறகு வேலையை நோக்கி ஓடுகிறாய்,காதல் வயதில் காசை நோக்கி ஓடுகிறாய்,வாழும்  வரை சாவை நோக்கி ஓடுகிறாய்.

இயந்திரத்தோடு மட்டுமே காதல் மொழி பேசிக்கொண்டிருப்பதால் உனக்கு மனசு என்ற ஒன்று என்பதை மறந்துபோனயா?இல்லை கடமையை மட்டுமே நீ கரம் பிடித்த காரணத்தால் உன் இதயம் என்ன மரத்துப்போனதா?

காலச்சக்கரத்தில் நீ கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து கொண்டிருக்கிறாய்!

கணினியோடு உன் கைகள் ஆடுகின்ற நாட்டியத்தில் லயித்து போன உன் கண்கள் அக உலகையும் ,நிஜ உலகையும் நிராகரித்து விட்டது என நிச்சயம் சொல்லுவேன்.

காந்தி புன்னகைக்கின்ற தாள்களை காணும் வரை,உன் புன்னகையும்,உழைப்பும் யாரோ திருடிக்கொள்கிறார்கள் என கண்ணனுக்கு தெரியாத கடவுளோடு நான் கார சாரமாய் விவாதம் செய்கிறேன்!

 இந்த நூற்றாண்டு உனக்கு பணம் பண்ண கற்றுக்கொடுத்தாதே தவிர மனதை பண்படுத்த கற்றுக்கொடுக்க வில்லை!

இயற்கையை ரசிக்க தெரிந்தவன் மனிதன்!ஊரடங்கும் நேரம்,இரவு உன்னைத் தாலாட்டும் போதும் உன் விழிகள் அழகிய வானத்தை நோட்டமிடுகிறது ஆனால் ,உன் மனம் என்னவோ எப்போது அந்த நிலவில் பிளாட் போட்டு குடியேறுவோம் என எண்ணிக்கொண்டிருக்கிறது!

நீ தனத்தை தேடி அலைந்துகொண்டிருக்கும் வேலை(ளை)யில்  உன்னையே நீ தொலைத்து கொண்டிருக்கிறாய்.உனக்காக படைக்கப்பட்ட அன்பையும்,மகிழ்ச்சியையும் வெளியேற்றி விட்டு யாருக்கப்ப
நீ அரசாங்கம் நடத்துகிறாய்?


மனிதா !உன் மனம் என்ன கல்லாகி போனதா?இல்லை..இல்லை!மரம் கூட தன்  வேர்களோடு பின்னி பிணைந்து வாழுகிறது.ஆனால் ,நீ அறிந்து வைத்திருக்கும் உறவுகளின் பெயர்கள் அதிகபட்சம் ஐந்து இருக்குமா?

அன்பனே!வா!கொஞ்ச நேரம் நித்திரை களை .உன் ஆண்ட்ராய்டு போனுக்கு பின்னாலும் ஆனந்தம் கொட்டிக்கிடக்கிறது.அள்ளிக்கொள்!இரைச்சல் மிகுந்த உன் இயந்திரங்களுக்கிடையே இயற்கை உனக்காக ஒரு இன்பக்கடலையே படைத்திருக்கிறது!

உன் கைப்பேசியை மறுதலித்துவிட்டு கால் கடக்க மண்ணோடு பேசிக்கொண்டு போன அனுபவம் உண்டா?

அதிகாலையில் மொட்டுக்கள் மலர்கின்ற ஓசைகள் கேட்டதுண்டா?

சின்னச்சிறு குழந்தையின் பிஞ்சு விரல்களால் மோதி மோதியே உடைந்துபோகும் கலையினை கண்டதுண்டா ?

மரங்களை ஸ்தாபித்ததுண்டா?மனதினை பயிற்றுவித்ததுண்டா?

கண்ணனுக்கு தெரியாதவர்களுக்கு உதவுகின்ற சுகத்தினை அறிந்ததுண்டா?உதவப்பட்டவர்களின் நன்றியுரை கண்டு நீ புன்னகைத்ததாய் உன் நாட்குறிப்பில் எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா ?

காற்றோடு கதை பேசிய காலங்கள் எதாவது உனக்கு நினைவிருக்கிறதா?

எங்கிருந்தூ வருகின்ற மழைத்துளி நெற்றியை முத்தமிடும் ஆனந்தம் அறிந்ததுண்டா?

சுயதரிசனம் பெற்ற  நாளுண்டா?

மனிதனே!உன் இரும்பு இதயத்தில் பூக்களின் மேன்மை இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தால் என் வார்த்தைகள் விளங்கும்.

உனக்காக உருவாக்கப்பட்ட வாழ்க்கையை நேசி,சுவாசி,கொண்டாடு...!வாழ்க்கை உனக்கு மகிழ்ச்சி கதவுகளை காத்திருக்கும் வேளையில்,உன் பணம் பண்ணும் பயணத்தில் நீ பறந்து போயிடாதே!

என்றாவது ஒரு நாள்,நகரத்தில் இருக்கும் உன்னை நரகத்திற்கு அழைத்து செல்ல எமதூதர்கள் வரத்தான் போகிறார்கள்,அதற்குள் கையில் இருக்கும் சொர்கத்தை அனுபவித்து விடு...!



கோவை.சரவண பிரகாஷ்.

Thursday, 20 April 2017

நீயின்றி அமையாது உலகு..!




இந்த உலகத்திலேயே மிக அற்புதமான மனிதரை உங்களுக்கு இப்போது அறிமுகம் செய்து வைக்கப்போகிறேன்.நீங்கள் என் எழுத்துக்களை படித்து கொண்டிருக்கக்கூடிய இந்த நொடி அந்த மனிதர் உங்கள் வீட்டில் தான் இருக்கிறார்.

அந்த சிறந்த மனிதரை காணவேண்டுமா ?

எழுந்து சென்று கண்ணாடி முன் நில்லுங்கள்!

ஆம்.இந்த உலகத்தில் மிகச் சிறந்த மனிதர் நீங்கள் தான்.நீங்கள் நினைப்பதையும் காட்டிலும் நீங்கள் பலசாலி,நீங்கள் நினைப்பதை காட்டிலும் நீங்கள் புத்திசாலி.இந்த உலகம் உங்கள் நம்பிக்கை சிறகுகளை மறக்க வைத்திருக்கலாம,அதனால் பருந்து நீங்கள் ஊர்க்குருவி ஆகிவிட முடியுமா?

இந்த கட்டுரையின் தலைப்பை பார்த்த உங்கள் கண்கள் அண்ணார்ந்து பார்த்திருக்கும்,என் எழுத்தின் மையம்  காதலாக இருக்கும் உங்கள் இதய துடிப்பு உங்களுக்கு உணர்ந்திருக்கலாம்.சரி தான்!உங்கள் மீது நீங்கள் கொள்ள வேண்டிய காதலை புதுப்பிக்க தான் என் எழுத்தாணி இங்கே தலைகுனிகிறது!

மனிதா !உன்னை பற்றி உனக்கு தெரியாத சில உண்மைகளை எடுத்துரைக்க போகிறேன்.அதை நீ பார்க்கும் விளையாட்டு போட்டி போல் உன்னிப்பாக கவனித்திடு!விவசாயிகள் பிரச்னை போல விளையாட்டை எடுத்துவிடாதே..!

இயற்கையின் படைப்பில் நீ ஒரு அதிசயம்!உன்னை தவிர இங்கு எல்லாமே அஃறிணைகள் தான்.உன்னைத்தவிர பேரறிவு  படைத்த ஜீவராசிகளின் பெயர்பட்டியலை தேடிக்கொண்டிருக்கிறேன்.இறைவனின் அம்சம் நீ!புதிய உலகத்தை உருவாக்கும் ஆற்றல் படைத்தவன் நீ!

இந்த விவரங்கள் ஏதொன்றும் அறியாமல் மூலையில் முடங்கி கிடைக்கிறாயே.உன் கால்களை முடமாக்கியது  காலம் அல்ல,நீ தான்!உன்னை சுற்றி நம்பிக்கை ஒளி பரவி கிடைக்கிறது,ஆனால் அஞான விளக்கை விட்டு வெளிவர மறப்பது  நீ தான் !

இந்த உலகத்தால் உன் முயற்சிக்கு தானே முட்டுக்கட்டை போடமுடியும்,உன் நம்பிக்கையை என்ன செய்யமுடியும்?உன் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பது லட்சிய நெருப்பு,அதனால் உன் அவநம்பிக்கையை பொசுக்கு!

ஆயிரம் தோல்விகளின் விலாசம் கேட்டு நீ வெற்றியை அடையும் போது அது செல்லாது என்று சில குள்ளநரிகள் மேல்முறையீடு செய்யலாம்.சிங்கம் நீ,தெருநாயின் குரைப்பிற்கு அஞ்சுவதா ?
எல்லையில்லாத வெற்றி பிரேதேசத்தின் சக்கரவர்த்தி நீ,கேவலம் குள்ளநரிகளின் மனக்குமுறல் கேட்டு உன் கனவு சாம்ராஜ்யத்தை களைத்து விடாதே!


நீ செல்லுகின்ற பாதை முட்களால் நிரம்பி இருக்கலாம்,ஆதனால் என்ன முட்களின் இடையில் தான் ரோஜா வசிக்கும்!வலிகள் இல்லாமல் வழிகள் இல்லையே.வலிகளை ஏற்று கொள்க !

வாழ்க்கை பயணத்தில் ஒரு கட்டத்தில் தற்காலிகமான பிரச்சனைகள் கையாள முடியாமல்,நீ நிரந்தரமாக உக்கார்ந்து விடுவதற்கு காரணிகள் என்ன என்பதை சிந்தித்து பார்த்தேன்.கண்டுகொண்டேன்!உனக்கு உன் துயரங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது,உன் பலவீனங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது,உன் பிடரியை பிடித்து ஆட்டக் கூடிய உலகத்தின் வார்த்தைகள் மீது நம்பிக்கை இருக்கிறது.ஆனால்  நண்பா உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லாமல் போனதேன்?நம்பிக்கையை விவாகரத்து செய்து விட்டு கவலைகளை ஏன் கட்டி கொண்டு அழுகிறாய்?

வா!உன் கவலை காட்டை விட்டு வெளியே வா.நீண்ட துயில்  கலை !உனக்காக விடிந்திருக்கும் விடியல் பார்!உன் முகம் கனவே உதித்திற்கும் ஆதவன் பார்.உன் பாதங்களை ஸ்பரிசித்து செல்லும் காற்றை உணர முடிகிறதா?நம்பிக்கையோடு முகம் மலருகின்ற மலர்களை பார்!நீ காணும் மனிதர்களின் உதட்டினையும் உள்ளத்தையும் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்ற உற்சாகத்தை கடன் வாங்கு!வானத்தை அண்ணார்ந்து பார்!

இதற்குமேலும் உற்சாகத்தை நீ அள்ளி அணைக்க வில்லையென்றால்,கவலை உன்னை கொஞ்ச கொஞ்சமாக கொன்றுவிடும் தோழா!

இந்த நிமிடம் உன்னையே நீ மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம்!

இந்திய சரித்திர புத்தகத்தில் எல்லோர்க்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.உனக்கான பக்கத்தை உன் வேர்வைகளால் எழுத்து,கண்ணீரால் அழித்து விடாதே!


நீ இன்றி அமையாது உலகு...!




கோவை.சரவண பிரகாஷ்.

Tuesday, 11 April 2017

அன்புள்ள அவளுக்கு.....!

[வாழ்க்கையின் மையப்பகுதியில் இருக்கும் வாலிபன் ஒருவன் தன எதிர்கால வாழ்க்கைத்துணைக்கு எழுதும் ஓர் கற்பனை கடிதம்]

வருத்தங்களையும்,மகிழ்ச்சிகளையும் சமஅளவில் சுமந்து கொண்டு இந்த கடிதம் உன்னை வந்தடையலாம்.எல்லோரும் நிகழ்கால புள்ளியில் இருந்து இறந்தகாலத்தை திரும்பி பார்ப்பார்கள்.நான் இருக்கும் காலத்தை எட்டி பார்க்கிறேன்!

என்னவளே!எங்கிருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்?மரத்தில் இருந்து தினம் உதிரும் பூக்கள் மாதிரி
அன்பே உன்னை பற்றி நான் கொண்ட நம்பிக்கையும் தினம் தினம் உதிர்கிறது..!

வறுமை,வெறுமை,தனிமை இவற்றால் நான் சூழப்பட்டிருந்தாலும் என் லட்சிய அலைகள் ஒருபோதும் ஓய்வதில்லை.காரணம்,கலங்கிய கண்களுக்கும்,உடைந்து போன இதயத்திற்கும் மருந்தாக நீ வருவாய் என்ற
ஆறுதலை நான் ஒருபோதும் மறந்ததில்லை!

அடியே!22 வருடங்கள் ஆகிறது என் வாழ்க்கை சக்கரம் இன்னும் நிற்கவில்லை.ஆற்றமுடியாத மிகப்பெரிய பணியை ஆற்றிய பிறகே என் வாழ்க்கை நின்றுபோகும்.என் கனவிற்கு வெற்றிக்கும் இடையில் உள்ள
வலிகளை பூமிப்பந்தின் எங்கோ இருக்கும் நீ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை!

மனதை பிளக்கும் வழிகள்,இதயத்தை கிழிக்கும் பிரிவுகள்,அவமானங்கள்,என் நம்பிக்கையை அடியோடு சாய்த்து விட்டு தோல்விகள் என்று என் சோகப்பட்டியல் நீண்டு போகும்.உன்னை விட நான் அதிகமா நேசிக்கும் என் தலையணைக்கு கூட பல ரகசியங்களை நான் சொன்னதில்லை!

என்னவளே!என்னை மன்னித்துவிடு.நீ எனக்கு இரண்டாம் மனைவியாகத்தான் இருக்க முடியும்.நான் எப்போது என் இலட்சியத்தை மணம் முடித்துவிட்டேன்!

சொல்லமுடியாத துக்கங்கள் பீறிட்டு எழும்போதெல்லாம் மனம் உன்னை நாடும்.அன்பிற்காக எங்கும்!அனால் அன்பே நான் உன்னை அதிகம் நினைக்க கூடாது என சபதம் செய்து கொண்டேன்,நீ விக்கி விக்கி செத்துவிட கூடாதென்பதற்காக!

பேருந்து சீட்டுகளிலும்,கல்லூரி வாசல்களிலும் இளசுகள் காதலின் இலக்கணம் மாற்றிய போது காதலர்கள் மீது நம்பிக்கை இழந்தேன்.காதல் மீது அல்ல!

சில சமயம் லட்சிய தீயில் நான் முங்கி எழுகின்ற வேளையிலே உன்னை பார்க்காமலே விவாகரத்து செய்துவிடலாம் என்று தோன்றும்.அனால் அந்த எண்ணம் அடுத்த நாள் ஆதவன் உதிர்ப்பதற்குள் அஸ்தமித்து விடும்.


ப்ரியமானவளே!நீ என்னை வந்தடையும் காலமோ நான் உன்னை சேரும் காலமோ விதியின் கைக்குள் இருக்கிறது.இதுவரை நான் கடந்த அல்லது என்னை கடத்திய பெண்கள் யாரும் நீ இல்லை.காலியாக உள்ள என் இதயத்தின் அந்த தொகுதிக்கு இது இடைத்தேர்தல் அல்ல என்பதை உனக்கு நான் சொல்லிக்கொள்ள வேண்டும்.

உனக்கு எப்போதாவது அந்த இடத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தால் நான் சிகரம் தொடுவதற்குள் சிகரம் வந்துவிடு,அதற்கு பின் இந்த உலகில் என் இதயம் இயங்கும் காலம் மிக குறைவு!


ப்ரியமுடன்.
நான்

Sunday, 2 April 2017

                                                     மகிழ்ச்சிக்கான வழி ! 


நான் வாரத்தில் ஒரு நாள்   மனிதனாவேன் !

எப்போதும் இயந்திரத்தோடே பணியாற்றி கொண்டிருக்கும் தொழில்நுட்ப மாணவன் நான்.இன்று ஞாயிறுக்கிழமை,விடுதலை நாள்.ஞாயிறுகளில் நான் என்னையே ஆராய்ந்து பார்ப்பேன்.இயற்கையோடு கதை பேசுவேன்,புத்தகத்தோடு உரையாடுவேன்,வெற்றிக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க எத்தனிப்பேன் !

மாலை நேரத்தில் மண்ணோடு உரையாடி கொண்டே ஒத்தையடி பாதையில் காற்றோடு கதை பேசி கொண்டு சென்றேன்.அந்த மலைகள் ,ஆதவனை மறைக்கும் மேகங்கள்,ஆனந்த குளிர் காற்று ...அடடா எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என எண்ணி மகிழ்ந்தேன்!


நெடுதூரம் நடந்து வந்த களைப்பு.அதோ !தாகம் தணிக்க ஒரு தேனீர் கடை.களைத்து போன நாவினை தேனீரில் குளிரவைத்தேன்.தீடிரென்று ஏதோ ஒன்று என் கால்களை சுரண்டுவது போல் உணர்வு.குனிந்து பார்த்தேன்.கால் இரண்டும் இல்லாத ஒருவன் கை இரண்டையும் கூப்பி கண் கலங்கி நின்றான்.கூப்பிய அவன் கைகளுக்கு கிடைத்தது 5 காசுகள் மட்டுமல்ல இரண்டு கண்ணீர் துளிகளும் தான்.கனத்த இதயத்தோடு மெல்ல அவ்விடம் விட்டு நகர்த்தேன்.!


என் சிந்தனையின் ஆழம் உணர பார்த்தேன்,சமுதாயத்தின் வறுமை நோய் எப்போது தீரும் என்று என் மனமென்னும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.

என் அடுத்த எழுத்து பிறக்கப்போகும் இந்த ஒரு நொடியில் கூட உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் வறுமைக்கு பலியாகிக்கொண்டிருக்கிறது.உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்கள் இருப்பது இந்தியாவில் தானம்,எங்கோ படித்த அறிக்கை நினைவுக்கு வருகிறது.

எத்தியோப்பியா,சோமாலியா மக்களின் நிலை கண்டு நாம்எத்தனை முறை  கண்ணீர் விட்டிருப்போம்!பொழுதுக்கு பொழுது வித விதமான உணவுகளை உண்ணும் மக்கள் வாழ்கின்ற இதே உலகத்தில் தான்,பசிக்காக மனித கழிவுகளேயே உன்ன முற்பட்ட சபிக்கப்பட்ட மனிதர்களும் வாழ்ந்தார்கள்.

கொஞ்சம் பொறுங்கள்!உடனே இறைவனை பழிக்காதீர்கள்.இந்த நிலைமைக்கு கரணம் இறைவன் அல்ல,சகமனிதர்கள் தான்.சுயநலம் பொதுநலத்தை கொன்றுவிடுகிறது.

நம்மால் இந்த உலகத்தை மாற்ற முடியாது தோழமைகளே.ஆனால் நம்மை சுற்றி உள்ள சூழ்நிலையை மாற்றலாம்.சின்ன சின்ன விசயங்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.

நீங்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில் நாதியற்று ரோட்டோரத்தில் உறங்கி கொண்டிருக்கிறாரே முதியவர் அவர்க்கு காலை மாலை உணவு கொடுங்கள்!

உங்கள் பகுதியில் ஓர் முதியோர் இல்லம் இருக்கிறதே,அங்கு சென்று காயம்பட்டவர்களுக்கு மருந்தாக இருங்கள்!


வாரத்தில் ஒரு நாள் வசதியின் அர்த்தம் அறியாத பிஞ்சு குழந்தைகளிடம் சென்று ஊக்கம் கொடுங்கள்.



கல்வியின் சுவடு கூட படாத பாமர மக்களுக்கு மாதம் ஒரு நாள் ஆவது வகுப்பெடுங்கள்!

உங்கள் தேனீரில் தவறியது ஒரு சிறிய பிஸ்கட்டாக இருக்கலாம்,அனால் இந்த உலகத்தில் அது யாரோ ஒருவருக்கு காலை உணவாக இருக்க கூடும்.

நான் உங்களை சாக்கரடீஸ் ஆக வற்புறுத்தவில்லை ,சக மனிதனுக்கு முயற்சிக்கிறேன்.

மாற்றத்தை வெளியில் தேடவேண்டாம்.ஏனென்றால் அது உங்களிடம் இருந்து பிறக்க வேண்டியது !

உங்களை சுற்றி ஒரு மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்கி கொள்ளுங்கள்!

வலியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே மகிழ்ச்சிக்கான வழியாக நான் கருதுகிறேன்!

மகிழ்ச்சியும் அன்பும் பெறுவதில் இல்லை,கொடுப்பதில் இருக்கிறது!



மனிதனாகும் முயற்சியில் உங்களோடு நான்....

சரவண பிரகாஷ்.

Monday, 13 February 2017

காதலையும் கடந்து செல்வீர் !




விலைகள் இல்லாமல் இரு பொருட்களை பரிமாறிக்கொள்ளும் வர்த்தகம், காதல்.பரிமாறப்படும் பொருட்கள்  இதயங்கள்!ஒரு ஆணிடத்தில் உள்ள பெண்மையும் ,பெண்ணிடத்தில் உள்ள ஆண்மையும் வெளிச்சம் போட்டு காட்டும் ரகசியக்  கருவி, காதல்.எனக்கு காதலிக்க தெரியாது,அனால் காதல் தெரியும்!

நம் காதல் ஜெயிக்குமா தோற்குமா என்று இதயத்தில் விவாதம் நடத்தும் நாம் முதலில் எது காதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.காதல்  என்பது விரல்களின் தீண்டல் அல்ல,இரு மனங்களின் மௌன உரையாடல்.கொடுங்கற்களால் ஆன கர்வ கோட்டைகளை அன்பினால் உடைத்தெறியும் ஆயுதம்.காதலின் சாதனங்கள் யாதென என் மனதிடம் விண்ணப்பம் போட்டேன் ,அவை மந்திரியிடம் கொடுத்த மனு மாதிரி  காற்றில் பறந்தன.சொல்லவோ எழுதவோ முடியாத ஓர் விசித்திர  உணர்வு.காதலுக்கு உருவம் இல்லை,உணர்வு மட்டும் தான்!

இந்த 21 ஆம் நூற்றாண்டின் காதலர்கள் காதலிக்கிறார்கள் ,காதலில் மட்டுமே லயிக்கிறார்கள்.காதலிக்காகவோ காதலனுக்காகவோ விரும்பி தோற்கும் அவர்கள் காதலில் தோற்பதை தாங்கிக்கொள்வதில்லை.இதனால் உடைந்து போன இளம் நெஞ்சங்களை ஒட்டவைக்க தான் என் எழுத்துக்கள் இங்கே பிரசுரிக்க படுகின்றன.காதல்,வாழ்க்கையில் ஒரு அங்கம் தான்,அதுவே வாழ்க்கை ஆகாது.வாழ்க்கையின் ஒரு பகுதிக்காக வாழ்க்கையே தொலைத்துவிடாதீர்கள்.காதல் கசப்பு மருந்து என்று சொல்ல நான் நாத்திகன் இல்லை.காதலினால் இலட்சியத்தை மறந்துவிடாதீர்கள் என்று நினைவூட்டுகிறேன்.காதல் உங்கள் கனவுகளுக்கு நீர் ஊற்றட்டும்,அனால் அது உங்கள் லட்சிய வேர்களை அரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.காதல் திரை உங்கள் கண்களை மூடாமல் இருக்கட்டும்.கவலைகள் உங்கள் கால்களை தீண்ட அனுமதி அளிக்காதீர்.மனிதா !கொஞ்ச நேரம் காதல் மயக்கம் களை ,பார்வையை விசாலப்படுத்து.உனக்கெனவே அனுப்பிவைக்கப்பட்ட ஆதவனை பார்,எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் பூக்களை  நேசி.கவலையினால் உன் நம்பிக்கை நார்கள் துருப்பிடித்து போனதேன்!காதல் சிறையில் கட்டுண்டு கிடைக்கும் மானுட வா !காலம் உன் கை  விலங்கை அவிழ்க்க ஆயுத்தமாகிறது .வரலாறு உன் பெயரை வாசிக்க தவம் கிடக்கிறது,அதற்கு முன் நீ கவலைகளை விவாகரத்து செய்தாக வேண்டும்.இந்த வயதில் காதல் போல் ஒன்று வந்து போகலாம் அல்லது காதலே வந்து போகலாம்,அது உன் லட்சியத்திற்கு உரமாகிறதா,உன் உணர்வுகளுக்கு உணவாகிறதா ? என்று ஆராய்ந்து செயல்பாடு.

.சிலர் காதலை கடக்கிறார்கள்,சிலரை காதல் கடத்தி செல்கிறது.ஆணும் பெண்ணும் தான் காதலிக்க வேண்டும் என்று காதலுக்கு இலக்கணம் வகுத்தது யார்?காதலுக்கு நிறங்கள் இல்லை,காதலுக்கு வயது இல்லை,காதலுக்கு பாலினம் இல்லை,காதலுக்கு கண்களும் இல்லை.எல்லோரும் காதலிப்பதில்லை ஆதனால் எல்லோரையும் காதலியுங்கள்(இங்க காதல் என்பது நேசத்தின் குறியீடாகும் ).அனால்அந்த காதல் உங்கள் லட்சிய காற்றை நிறுத்தி விடும் என்றால் நிறுத்திவிடுங்கள்,அக்காதலை.மனிதா!மறுத்து போன காதலை மறந்து போ,போ நம்பிக்கையின் விரல்கள் பிடித்து கொண்டு,லட்சியம் தீபம் நோக்கி!காலம்,கண்ணீர் ,கவலை இவற்றை போல காதலையும் கடந்து செல்வீர்களாக!


சரவண பிரகாஷ்.